Managers might be a rulers but, executives are the real masters''
மேலாளர்கள் நிர்வாகத்தின் ஆட்சியாளர்களாக இருக்கலாம் ஆனால் .. நிர்வாகிகள் தான் உண்மையான எஜமானர்கள் என்று நிர்வாக விதியில் சொல்வார்கள். நாட்டில் ஒரு திட்டம் கொண்டு வரும் போது அதனை கடைமட்டம் வரை உள்ள மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தான். அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோய்தடுப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் திறம்பட செயலாற்றிய துறைகளில் உள்ளோரின் பணிகளைப் பற்றி பார்க்கலாம்.
#உள்ளாட்சித்துறை
உள்ளாட்சித்துறையில் கிராமப்பகுதிகளில் ஊரக உள்ளாட்சியும், நகரங்களில் நகர்புற உள்ளாட்சியும் செய்த பணிகள் கணக்கிலடங்காதவை. ஊரடங்கு நேரத்தில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள்,பழங்கள், மளிகை விநியோகம் செய்வதை உறுதி செய்து வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்தனர். தினசரி அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்றனவா என்பதை கண்காணித்தனர். தடுப்பூசி முகாம் நடத்துவது, கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று நோய்தொற்று பாதிப்புகளை கணக்கிட்டு மருத்துவ முகாம் நடத்துவது, நோய் தொற்றினால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி பணியாளர்களை நியமித்து உதவுவது, காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவது,முன் கள ஆய்வில் ஆக்சிஜன்,ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் வழங்கினர்.
ஒன்றிய அளவில் குறிப்பிடப்பட்ட கணக்கெடுப்பு இலக்கை விடவும் அதிக எண்ணிக்கையில் கண்காணித்தனர். தினசரி கூலி அடிப்படையில் பணியாளர்களை நியமித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர். தொற்று பாதித்த பகுதியில் அடையாள குறி இடுதல்,ப்ளிச்சிங் பவுடரை தெருக்களில் தெளித்தல்,
தொற்று பாதித்த வீடுகளில் உள்ளோர்க்கு கையுறை, மாஸ்க், கபசுரகுடிநீர் பாக்கெட், ஜின்க், வைட்டமின் மாத்திரைகள், எளிதில் மக்கும் ப்ளாஸ்டிக் பையுடன் ஒரு கிட் பாக்ஸ் கொடுத்தனர். கோவிட் கேர் செண்டர் அமைத்தல் மற்றும் தனிமை மையத்தில் இருப்போர்க்கு மூன்று வேளை சாப்பாடு, கபசுர குடிநீர், தேநீர் அளித்தனர். இவையனைத்திற்கும் மேலாய் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்தோரையும் அடக்கம் செய்துள்ளனர்.
இத்தகைய மகத்தான் பணிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், உதவி பொறியாளார், பணி மேற்பார்வையாளர் போன்றோர் இறந்துள்ளனர் என்பதும் வேதனையான செய்தி
#காவல்துறை
கயவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றிய கையோடு கொரோனா நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் இவர்களின் பணி அரும்பணியாகும். ஊரடங்கை வெற்றியாக்கியதில் இவர்களின் சிரத்தை அதிகம். இரவு ரோந்து, வாகனங்களை சரிபார்த்தல், ஈ-பதிவு சரிபார்த்தல், தேவையின்றி செல்வோரை விசாரித்து அனுப்புதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வருகையின் போது பாதுகாப்பு என நிற்க நேரமின்றி கடமையாற்றுகின்றனர் காவலர்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிலும் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களும் உண்டு. தொற்று பாதிப்புக்குள்ளான காவலர் 15 நாளிலிருந்து 20 நாள்வரை தனிமைப்படுத்திய பின் நோய் சரியானவுடன் மீண்டும் பணியாற்ற வருகின்றனர். நோய் தொற்று முடியும்வரை விடுப்பு இல்லை என்பது கூடுதல் தகவல்
#மின்சாரத்துறை
கடந்த ஆண்டு ஊரடங்கிலும் சரி இந்த ஊரடங்கிலும் சரி மின்வாரிய ஊழியர்களின் பணி மகத்தானது. கோடையில் மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.தொற்று அதிகமுள்ள காலத்திலும் மின்வாரியம் இயங்கியது.
மே மாதம் முழுவதும் பல பகுதிகளில் 100 சதவீதம் பணிக்கு ஊழியர்கள் வந்து மக்கள் பணியாற்றினர். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள்,தொற்று பாதித்த வீடு உள்ள பகுதிகளுக்கே சென்று மின் தடை நீக்கினர். மருத்துவமனைகளில் மின்வெட்டு இன்றி பாதுகாத்து இந்த தொற்று காலத்திலும் மகத்தான மக்கட்பணி ஆற்றினர் மின்வாரிய ஊழியர்கள்.
பெருந்துறையில் கொரோனா சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை மையத்தில் மின்சார நீட்டிப்பு செய்ய முடியாத நிலையில் 250 கிலோ வாட் சக்தி கொண்ட 2 மின்மாற்றிகள் மற்றும் 5 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். இது ஒரு உதாரணம் மட்டுமே. மேலும் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகளுக்காகக் கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கவிலைக்கடைகள்
#நியாய விலைக்கடைகள்
இந்த ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதில் நியாய விலைக்கடைகள் முக்கிய பங்காற்றின. கடந்த பொங்கல் முதல் ஆரம்பித்த இவர்களின் பணி இன்னும் நான் ஸ்டாப்பாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களாலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தாலும்,மகளிர்சுய உதவிக் குழுக்களாலும் நடத்தப்படுகின்றன.
சிலபகுதிகளில் நடமாடும் நியாய விலைக்கடைகளின் மூலமும் ஸ்கோர் செய்தனர்.
நோய்த்தொற்று காலத்திலும் பொருட்களை இருப்பு வைத்து விநியோகித்து, நிவாரண உதவிக்காக வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி, நிவாரண நிதியை விநியோகிப்பது வரை இன்று வரை ஓய்வின்றி உழைக்கின்றனர்.
முதல்கட்ட கொரொனா நிதியை 98.4% அட்டைதாரர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
#சுகாராரத்துறை
கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீட்கப் போராடியவர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள். தொற்று ஆரம்பிப்பதற்கு முன் ஜனவரி மாதமே தடுப்பூசிக்கான ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போதே தடுப்பூசி போடப்படும் அறை, பதிவு செய்யும் விபரம், தடுப்பூசி செய்யும் இடம், காத்திருப்பு அறை, இணையதளத்தில் சரிபார்ப்பு செய்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவரோ, செவிலியரோ வீட்டிற்கு சென்றால் கூட தன் குழந்தைகளை தள்ளி நின்று பார்க்கும் சூழ்நிலை. எப்போதும் PPE கிட் அணிந்துள்ளதால் உணவருந்த, இயற்கை உபாதைகள் மற்றும் தாகத்திற்கு அடிக்கடி தண்ணீர் கூட அருந்த முடியாத சூழ்நிலையில் போராடுகின்றனர். பல மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவிலே பணியாற்றுகின்றனர். மாரத்தான் ஓட்டம் போல் தொடர்ந்து ஓடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இவர்களின் குடும்பமே வேண்டிக் கொண்டிருக்கும். தொற்று ஏற்பட்டு தனிமையிலும் இருந்தாலும் நோய் குணமானவுடன் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். சிலர் தங்கள் இன்னுயிரையும் கூட தியாகம் செய்துள்ளனர். களத்தில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என முழு சுகாதாரத் துறையும் களத்தில் நின்று போராடுகிறது. அவர்கள் நோயாளிகள் மற்றும் பார்ப்போர் அனைவரிடமும் சொல்வது முகக்கவசம் அணிவது மற்றும்தனி நபர் இடைவெளியையும்தான் வலியுறுத்துகிறார்துறை
#வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பல மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் குடும்பத்தினர்களிடம் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் ஊரக வளர்ச்சி துறை மேற்கொண்ட பணிகளை மாநகரப் பகுதிகளில் மேற்கொள்கின்றனர்.
பேரிடர் காலங்களில் ஆபத்து ஏற்படும் வேளையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பின் போது களத்தில் இறங்கி பணியாற்றியதுடன் மக்களுக்கான நிவாரண உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். மழை பாதிப்பு பணிகளுக்கான நிவாரண உதவிகளை முதல்வரின் உத்தரவை முழுமையாய் நிறைவெற்றி வருகின்றனர்
பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை துரிதமாக பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்கின்றனர். பேரிடர் காலங்களில் மாநில/மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு மையம் தயார்நிலையில் வைத்திருந்தனர். நோய் தொற்று காலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் துரிதமாய் செயல்படுகின்றனர் அவர்களுக்கு பாராட்டுகள்.
இந்த கொடுமையான நோய் தொற்றுக்காலத்தில் தாங்களும் ஒரு ஊழியர்களே எனும் எண்ணத்தில் துறை அமைச்சர்களும், துறை செயலாளர்களும் இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் பணியாற்றும் முதல்வரும் பாராட்டுக்குரியவர்கள்.
"பாதை என்று ஏதுமில்லை பயணியே நீ பயணிக்கும் தடங்களில் நீள்வதே உன் பாதை" என்பார் அண்டோனியோ மச்சாடோ.அதுபோல் இவர்களின் பாதையில் பயணித்து இவர்களின் பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாய் சுயகட்டுப்பாட்டுடன் இருப்போம். கொரொனாவை வெல்வோம்
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment