Wednesday, 13 October 2021

விநோதய சித்தம் விமர்சனம்*மணி

விநோதய சித்தம் விமர்சனம்

*மணி

விநோதய சித்தம் பேரை பார்த்ததும் எதோ டப்பிங் படம் போலத்தான் தோனுச்சு.ஆனால் படம் பார்க்க ஆரம்பிக்க கதையோடு நாமும் பயணப்படுவது போல் தோன்றியது. மலையாளத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த இது போல் ஸ்டார் வேல்யூ, கமர்சியம் அம்சமின்றி வருவது தமிழிலும் முன்னெடுத்து நல்ல படத்தை கொடுத்துள்ளனர்.

டால்ஸ்டாயின் சிறுவயதில் அவருடைய ஆசிரியர்..ஒரு முறை அவனை கண்ணை மூட வைத்து.. இப்போது நீ இறந்துவிட்டாய் இப்போது நீ என்ன உணர்கிறாய் என கேட்பார்.அவர் சொன்னதை அப்படியே அவரின் மனசாட்சியாக ஒரு வெள்ளைத்தாளில் அனைத்தையும்  எழுதுவார். பின் கண் திறந்தால் டால்ஸ்டாய்க்கே புதிய உலகை கண்டது போல் திருப்தி வரும். இப்படத்தை பார்க்கும் போது இக்கதை நினைவுக்கு வந்தது. ஆனால் இப்படம் இதிலிருந்து மாறுபட்டது.20 வருடத்திற்கு முன்பு தான் பார்த்த ஒரு மேடை நாடகத்தை தற்போது திரைப்படமாக உருவாகி உள்ளதாக இயக்குநர் கூறினார்.

#கதை

சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர் தம்பி ராமையை.பிரஸ்டீஜ் பத்மநாபன் மாதிரி.கடமை, நேரந்தவறாமை என குடும்பத்தைக் கூட கவனிக்காமல் அலுவலகமே கதி என்று இருக்கிறார். விரைவில் general manager promotion ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

மறுநாள் 25ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தை கூட பொருட்படுத்தாமல் விமானத்தில் கோவை சென்று காரில் திரும்புகிறார்.வரும் வழியில் கோர விபத்தில் தம்பி ராமையா உயிரிழக்கிறார்.அவரின் ஆன்மா  கதறுகிறது.அப்போது அங்கு தோன்றும் காலமான சமுத்திரக்கனி 90 நாள் உயிர் பிச்சை கொடுக்கிறார். தானும் உடன் இருப்பதாக நிபந்தனையுடன்.

இந்த மூன்று மாதங்களில் தம்பி ராமையாவின் வாழ்வில் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கும் மிஸ்ட் கால் வந்தது போல் உணர வைப்பதுடன் நெகிழ்ச்சியாக முடிகிறது

#ப்ளஸ்

*படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி என்று சொன்னால் தான் தெரியுமளவிற்கு total different.சூப்பர் சார்

*பாடல்கள் இல்லாமல் பின்னணி இசையில் சத்யாவும், ரம்மியமான ஒளிப்பதிவில் ஈர்க்கிறார் என்.கே ஏகாம்பரம்

*ஹீரோ தம்பி ராமையா தான். ஆங்காங்கே பழைய மாடுலேசன் எட்டிப் பார்த்தாலும் ரசிக்க வைக்கிறார்.

*சம்பவங்கள் நடத்தப்படுகிறது,
சி.எம் ஆவதெல்லாம் ஆசை இல்ல வியாதி,
இருக்கிறவனுக்கு இருக்கிறதெல்லாம் பிரச்சனை
இல்லாதவனுக்கு இல்லைனு மட்டும் தான் பிரச்சனை,

கடவுளை வேண்டிக்க..
அப்ப உங்க உழைப்பு மேல நம்பிக்கையில்ல.

கிடைக்கலனா விதி
கிடைச்சா அதிர்ஷ்டம் என வசனங்கள் பெரும் பலம்.

வாழ்க்கையில எனக்கு இதுவரை எதுவுமே நல்லது நடக்கல, நான் இல்லனா எதுவுமே நடக்காது,
இந்த குடும்பமே என்ன நம்பித்தான் இருக்குது, இந்த ஆபிசில செங்கலுக்கு அடுத்து நான் தான் தாங்கி நிற்கிறேன் என நான் நான் என நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும் காலம் செவுல்லயே அப்பி இதானாடா நீனு சொல்லும் மாயக்கண்ணாடி இந்தப்படம்.

பாட்டு, காமெடி, ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் படம் ஆரம்பித்த  ஏழாவது நொடியே கதைக்குள் நுழைந்து வேறு உலகத்துக்கு போய் இங்கு வந்து வாழ்ந்த ஃபீல்.சினிமாத்தனம் இருக்காது.ஒன்றரை மணி நேரம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை பொழுது போக்காய் பார்க்க நினைப்போர் பார்க்கலாம்.

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment