Sunday, 17 April 2022

கதை சொல்லி-கி.ராஜநாராயணன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:22
Pages:334

கதை சொல்லி
-கி.ராஜநாராயணன்

கதை சொல்லும் மரபு தமிழகத்தில் பன்னெடுங் காலமாகவே நடந்து வந்துள்ளது. தற்போது இரவினில் குழந்தைகளை தூங்க வைக்க மட்டுமே பயன்படும் கதை.. ஒரு காலத்தில் வாய்மொழி இலக்கியமாக ஒவ்வொருவரும் அறிந்த கதைகளை பரிமாறி செவிவழிக் கதைகளாக நிறைய கதைகள் நாட்டுப்புற இலக்கியங்களில் காணப்படுகிறது. அவ்வாறு கதைசொல்லி இதழை ஆசிரியராக கொண்டு கி.ரா வெளியிடுகிறார். இந்த புத்தகம் கதைசொல்லி புத்தகத்தின் மூன்றாவது பாகம் ஆகும். பல்வேறு ஆளுமைகள் இந்த புத்தகத்தில் தங்களுடைய கதைகளை பதிவு செய்துள்ளனர்.

பக்கத்து கட்டில் எனும் பிரெஞ்சு கதை மருத்துவமனையில் நிகழும் கதையாகும். வயதான ஒருவர் தன் படுக்கையில் படுத்தவாறு இருக்கும் போது நள்ளிரவில் விழிப்பு வரும். அதற்கு பிறகு உறக்கம் வராது. ஒருநாள் அவர் பக்கத்து கட்டிலை பார்த்தேன் அங்கே ஒருவர் திரும்பி படுத்து இருப்பது போன்ற ஒரு உருவம். உடனே செவிலியரை கூப்பிட்டு யார் இவர் என்று கேட்கிறார் .அங்கு யாருமே இல்லை என்று பதில் சொல்கிறார். இவருக்கு ஒரே குழப்பம் பிறகு தூங்கி விடுகிறாள் இரண்டாம்நாள் அதேபோல் பக்கத்துக் கட்டிலில் யாரோ ஒருவர் படுத்து இருப்பது போல் இருக்கிறது.

 இப்போது பணியாளரை கூப்பிட்டு யார் இவர் என்று கேட்கிறார் அப்போது அங்கு யாரும் இல்லை என பதில் கூறுகிறார் இவருக்கு மேலும் குழப்பம் அதிகமாயிற்று மூன்றாவது நாள் இரவு விழித்து பார்க்கும் போது அவரை பார்த்த ஒரு உருவம் இருக்கிறது இவர் இனி யாரையும் அழைக்காமல் தானே சென்று பார்த்துவிட வேண்டும் என்று மெல்ல படுக்கையைவிட்டு எழுந்து போய் அவரை தொட முயற்சிக்கிறார் அப்போது கீழே விழுந்து விடுகிறார். நொறுங்கிப் போன உடலை எடுத்து படுக்கையில் போட்டு விட்டு மருத்துவரும் செவிலியர்களும் அவரை உற்றுப் பார்க்கிறார்கள். ஏன் இவர்கள் மௌனமாய் கவலைப் படுகிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை .

தெளிந்த கண்களுடன் இருக்கும் கிழவரிடம் அவன் போய் சேர்ந்துவிட்டான். இதை விட மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது. மூன்று முகங்கள் மேலும் மேலும் மங்கலாகத் தெரிந்தன. தூர விலகிப் போயினர். எந்த அளவுக்கு என்றால் எவருக்கும் அவருடைய உரத்த குரல் கேட்கவில்லை என்று கதை முடிந்திருக்கும்.
 மரணத்தின் தருவாயில் இருக்கும் ஒருவரின் மனநிலையை மிக அழகாக மொழிபெயர்ப்பு என்ற உணர்வே இல்லாமல் சுவைபட விளக்கி இருப்பார்கள்.

தோளின் மீது ஒரு கை கதை. இதுவும் மொழிபெயர்ப்புதான். அதிகாலை அவசர அவசரமாக அலுவலகத்துக்கு செல்லும் போது ரயிலில் உறங்கி விடுகிறார் ஒருவர். திடீரென பயணிகளில் சத்தம் கேட்டு எழுந்து செல்லும்போது ஒரு கை பின்னாலிருந்து அவன் தோளை பற்றிய பிறகு உரிமம் இருக்கிறதா என்று கேட்கிறார். அவரின் இரும்பு கண்களில் அத்தனை ஆவேசம் என்ன உரிமம் என்று கேட்க.. நடப்பதற்கான உரிமம் என்று சொல்கிறார். உடனே தூக்கம் தெளிந்து காலையில் விழிக்கிறார் அந்த அதிகாரி. நடந்ததெல்லாம் கனவா என்று யோசித்து விட்டு மீண்டும் ரயிலில் ஏறி செல்கிறான் .அதே நிறுத்தம் வருகிறது .இப்போது ஏதோ ஒரு கையை அவர் எதிர்பார்த்துக் கொண்டு செல்கிறார். இதுபோல் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து செல்கிறார் என்பதோடு கதை முடிகிறது. ஒருவனின் பய உணர்வு எவ்வாறு அவனை துரத்திக் கொண்டே இருப்பதை இந்த கதையில் சொல்லியிருப்பார்.

கழனியூரன் எழுதிய கதைகளில் குலதெய்வ வழிபாடு குறித்த வரலாற்றினை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் திருநெல்வேலி மாவட்டத்தில் வனப்பேச்சி அம்மன் அமைந்துள்ள கோவிலின் வரலாறு அங்கு மக்கள் எவ்வாறு முதன் முதலில் அங்கு சென்று வழிபட்டனர் என்றும் கூறியுள்ளார் இதே போன்று கிராமத்துச் சூழல் சார்ந்த குலதெய்வ வழிபாடு இருப்பதையும் அவர் கூறியுள்ளார்.

மகாகவியும் மனைவியிம் என்ற பதிவில் முனைவர் இரா ஆலாலசுந்தரம் பாரதியாரின் எட்டையபுர வீட்டிலிருந்து துவங்கி புதுச்சேரி வரை கணவனுக்கும் மனைவிக்கும் உண்டான வாழ்க்கையையும் அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் சம்பவங்களையும் கூறியுள்ளார். மேலும் பாரதி பாரதியாராக மாறிய நிகழ்வையும் தீண்டத்தகாதவரோடு அவர் காட்டிய அன்பினையும் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிப்போம்

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment