Wednesday, 11 May 2022

நெகிழ்ச்சி

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் குடியரசு தலைவர் ஆக இருந்தபோது, ​​அவர் குன்னூருக்கு அரசுமுறை பயணம் செய்தார். அங்கே சென்றதும், அவருக்கு பீல்ட் மார்ஷல் திரு.சாம் மனெக்ஷா அவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் இருப்பது தெரிய வந்தது. குடியரசு தலைவரின் பயணத்திட்டத்தில் இல்லை என்றாலும் டாக்டர்.கலாம் திரு மனெக்ஷாவை பார்க்க விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவமனை படுக்கையில் இருந்த அவரிடம் திரு. கலாம் 15 நிமிடங்கள் பேசினார்; அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.



திரு கலாம் கிளம்பும் முன் திரு. மனெக்ஷாவை கேட்டார்:

"நீங்கள் வசதியாக இருக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா ? உங்களுக்கு இங்கே ஏதாவது குறைகள் இருக்கிறதா? உங்களுக்கு இன்னும் ஏதேனும் வசதிகள் தேவையா?"

திரு.மானெக்ஷா "ஆமாம் மேன்மை தங்கிய குடியரசு தலைவர் அவர்களே, எனக்கு ஒரு மனக்குறை உள்ளது" என்றார். கவலை மற்றும் வேதனையுடன் அதிர்ச்சியடைந்த கலாம்,
"அது என்ன சொல்லுங்கள்" என்று அவரிடம் கேட்டார்.

திரு மனெக்ஷா பதிலளித்தார்: "ஐயா, என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்பதே எனது குறையாக இருக்கிறது, எனது அன்புக்குரிய நாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்க முடியவில்லை. ஆகவே படுக்கையில் இருந்து தங்களை வணங்குகிறேன்". என்றார்.
இருவரும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பான கதையின் மீதமுள்ள பகுதி என்னவென்றால், திரு சாம் மானெக்ஸா திரு அப்துல்கலாம் அவர்களிடம் பீல்ட் மார்ஷல் ரேங்க் ஓய்வூதியம் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனக்கு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

மனம் நொந்து ஆக்ரோஷமான திரு கலாம் டெல்லி சென்றதும் ஒரு வாரத்திற்குள் ஓய்வூதிய நிலுவைத் தொகை கிட்டத்தட்ட
ரூ .1.25 கோடி க்கான காசோலையை பாதுகாப்பு செயலாளரிடம் கொடுத்து சிறப்பு விமானம் மூலம் ஊட்டி வெலிங்டனில் இருந்த திரு மானெக்ஷாவுக்கு அனுப்பினார்.
அதுதான் திரு.அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்.

திரு சாம் மானெக்ஷா காசோலையைப் பெற்றதும் உடனடியாக அந்த பணத்தை இராணுவ வீரர்கள் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment