மாடமாளிகை களால் நிறைந்த வீதிகள் 'மாடவீதி' எனப்பட்டன.
இவை பெரும்பாலும் கோயிலைச் சுற்றியே அமைக்கப் பட்டிருந்தன. இம்மாட வீதிகள் அக்காலத்தில் முதன்மைச் சிறப்பு வீதிகளாகக் (Main road) கருதப்பட்டன.
இவை கோயில் தேரோட்டம், திருவிழாக்கள் நடக்க ஏதுவாக விசாலமாக அகன்று பரந்த வீதிகளாக - பெருந்திரளான மக்கள் கூடி குதூகலிக்கும் இடங்களாகத் திகழ்ந்தன.
இவை அமைந்த திசையின் பொருட்டு கீழ மாட வீதி, மேல மாட வீதி, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி ஆகிய பெயர்களால் அழைக்கப் பட்டது.
அரச குடும்பங்கள், அரசாங்க முதன்மைச் சுற்று அலுவல் மனிதர்கள் இத்தகைய வீதிகளில் குடியமர்த்தப் பட்டிருந்தனர். சேவைத் தொழில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்த சுற்று வீதிகளில் தங்கியிருந்தனர்.
தமிழ் மொழியில் இன்றைக்கும் காணப்படும் கட்டடக் கலைச்சொற்களில் ஒன்று 'மாடம்'.
மாடம் - என்றால் மேனிலை வீடு எனப் பொருள். இன்றைக்கு வழக்கிலிருக்கும் 'மாடி' - என்ற சொல்லும் ஒத்த பொருள் குறிப்பனவே.
-படித்தது
No comments:
Post a Comment