கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாரு
சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு
கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு
நாடே சிரிக்கும்!
தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும்
கைகளை நம்பி
-வாலி
No comments:
Post a Comment