"என்ன நடந்திருக்கிறது? ஒரு தலைமுறையையே குமாஸ்தாவாக பெற்று,குமாஸ்தாவாக கல்விகற்க வைத்து,குமாஸ்தாவாக ஆக்கி விட்டிருக்கிறார்கள்.மிகச்சிறந்த குமாஸ்தாவாக ஆவதே வெற்றி என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மிகச்சிறந்த குமாஸ்தாவே முன்னுதாரணம்.ஒரு குமாஸ்தாவாக ஆவதற்காக அனைத்து தனித்திறமைகளையும் வீணடித்து, அனைத்து நுண்ணுணர்வுகளையும் மழுங்கடித்துக்கொண்டு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.உழைப்பது, உண்பது,கேளிக்கை-அவ்வளவுதான் ஒரு தினம்.வேலைசெய்வது, சேமிப்பது,பிள்ளை பெற்று ஆளாக்கி ஓய்ந்து இருமி சாவது - இவ்வளவுதான் மொத்த வாழ்க்கையும்"
ஜெமோ
No comments:
Post a Comment