Sunday, 21 August 2022

யுவன் சந்திரசேகர்(வெளியேற்றம்)

வாசல் தெளிப்பதற்காக எழுந்து வந்தாள் சித்ரா. முந்தைய இரவில் தூறல் விழுந்திருக்க வேண்டும். தரை ஏற்கெனவே ஈரமாக இருந்தது. கொட்டாங்கச்சியில் வைத்திருந்த கோலப்பொடியால் நாலாதிசையிலும் இரட்டைக்கோடுகளைக் கடனேயென்று இழுத்தபிறகு உருவான சிறு கட்டத்தில் கோலத்தின் சாயல் இருந்தது. 

எதையுமே மனமொன்றிச் செய்யப் பிடிக்காத நாட்கள் இவை. வருடக்கணக்காக ஒரே விதமாய்க் கழியும் வாழ்க்கையின்மீது ஒருவிதமான சலிப்பு ஊறியிருக்கிறது... நாற்பது வயதைக் கடக்கும்போது பெண்கள் சந்திக்க நேரும் உடல் உளைச்சலின் பகுதிதான் இந்த மன உளைச்சலும்..

-யுவன் சந்திரசேகர்
(வெளியேற்றம்)

No comments:

Post a Comment