Thursday, 8 September 2022

info

1965-ல் செப்டம்பர் 8-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உலகம் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அவற்றை சரிசெய்வதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

அதில், செப்டம்பர் 8-ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவுத் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோ செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவுத் தினமாக கொண்டாடப்படுகிறது.

#info

No comments:

Post a Comment