Wednesday, 26 October 2022

பிச்சைக்காரன்


மிகச்சிறந்த கவிஞர் ஒருவரின் கவிதை நூலுக்கு வெங்கட சாமி நாதனிடம் முன்னுரை கேட்டனர்..
அவர் இப்படி எழுதினார்.

""""இந்த கவிஞர் இதுவரை ஒரு நல்ல கவிதைகூட எழுதவில்லை என கருதுகிறேன்... கொஞ்சம் முயன்றால் என்றாவது ஒரு நாள் இவர் நல்ல கவிதை எழுதக்கூடும் என நம்புகிறேன்.. இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ஜனாதிபதியாகும் த்குதி உண்டு.. எல்லோருமே தான் என்றாவது ஒரு நாள் ஜனாதிபதி ஆகி விடலாம் என நம்புவதுபோன்றது இது.. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்..."""""

இப்படி அவர் எழுதியது அவர்  நேர்மையை காட்டுகிறது... இந்த கருத்தை தன் புத்தகத்தில் அப்படியெ வெளியிட்டது அந்த கவிஞரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது

இரு எதிர் தரப்புகளின் ஆளுமை பண்புகள் ரசிக்கும் படி இருக்கின்றன அல்லவா

அந்தக் கவிஞர் மு மேத்தா. புத்தகம் கண்ணீர் பூக்கள்

No comments:

Post a Comment