Sunday, 20 November 2022

பட்டாபிராமன்


Sardar Patel and his idea of India
The Man who saved India  என்ற புத்தகம் ஹிந்தோல் சென்குப்தா எழுதியது. அதில் இடம் பெறும் சில சுவாரஸ்யமான அளவைத் தகவல்கள்

கல்கத்தா பள்ளி ஒன்றில் கணக்கு வாத்தியார் மாணவர்களிடம் தலைவர்களின் உயரத்தைச் சொல்கிறார். காந்தி 5 அடி 3 அங்குலம், சுபாஷ் 5’5, படேல் 5’5, நேரு 5’8.  எனவே வரலாறு உயரமானவர்களுக்கானது என்கிறார். அவர் ஜின்னாவைச் சொல்லி அவரும் 5’8 அவருக்கும் நாடு கிடைத்தது என்கிறார். அந்த ஆசிரியர் 10ஆம் வகுப்புமாணவர் சராசரி உயரத்தில் இருந்த உயரமற்ற மனிதராம்.

சுனில் கில்நானியின்  Theidea of India வில் படேல் பெயர் 8 இடங்களிலும், காந்தி பெயர் 29 இடங்களிலும், நேருவின் பெயர் 65இடங்களிலும் வருகிறதாம்.
ராமச்சந்திர குஹா எழுதிய India After  Gandhiல்படேல் 48 இடங்களிலும், காந்தி 120இடங்களிலும்  நேரு 185 இடங்களிலும் வருகிறதாம்.

படேலின் மகள் மனிபென் படேல் அவரிடம் சொன்னதாக குறிப்பிடுகிறார். என்னால் வரலாற்றை எழுதும் வேலையை செய்து நேரவிரயம் செய்யமுடியாது.முடிந்த அளவு வரலாற்றை உருவாக்கிவிட்டு போக விழைகிறேன்.
காந்தி நேரு படேல் ஆகியமூவரையும் மும்மூர்த்திகள் என சென்குப்தா சொல்கிறார். வேறுபாடுகளைத்தாண்டி அவர்களிடம் affection brotherhood  அதிகமாகவே இருந்தது என எழுதுகிறார்.

படேல் காந்தி- நேருவைவிட  ambition குறைந்தவராக இருந்தார் எனவும் சென்குப்தா சொல்கிறார். ஆசாத் புத்தகத்தில் மாறுபட்ட தகவல் நமக்கு கிடைக்கும். காங்கிரஸ் ஸ்தாபனத்தை- அதற்கு பொறுப்பிற்கு வருபவர் குறித்த கட்டுப்பாட்டை தன் கையில் வைத்திருந்தார் என்பதை எப்படி பார்ப்பது எனத் தெரியவில்லை. கிருபளானி புத்தகம் ஆசாத் தகவலுக்கு மறுப்பாக படேலின் பக்கம் நிற்கும்.

சென்குப்தா சொல்வது வேறு ஒன்றில் சரி. அதாவது காந்தி- நேரு போல ஏராள எழுத்து வால்யூம்களை- அவர் தரப்பு குறித்து நின்று பேசுவதற்கான வகையில்- படேல் விட்டுச்செல்லவில்லை. சென்குப்தா இதை If history is writings by the victors, Patel clearly was on the vanquised side  எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே தான் படேல் குறித்த எழுத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.

 மனிபென் தன் தந்தையை குறித்து இப்படி ஒரு சித்திரம் தருகிறார்
Sardar was a man of few words. He wrote very little; he hardly kept any record of his public or party work. He destroyed letters addressed to him after reading them and replied by hand, not keeping copies.
இது முழுமையான சித்திரமா தெரியவில்லை. நம்மிடம் நேரு- படேல் கடித தொகுப்புகள் கிடைக்கின்றன. சில படேல் - காந்தி கடிதங்களும் கிடைக்கின்றன. மனிபென் பொதுவான அவர் சுபாவத்தை பதிவு செய்திருக்கலாம்.

-பட்டாபிராமன்

No comments:

Post a Comment