ஒரு கிறிஸ்தவ மத போதகர் உரையில் கேட்டதில் பிடித்தது..
ஒரு பணக்காரர் இருந்தார்.. வெளியூர் போக வேண்டியிருந்தது.. வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லி ஒரு வேலையாளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார் திரும்பிவர ஒரு வருடம் ஆகும் என்றார்
வேலைக்காரனுக்கு அவ்வளவு பெரிய வசதியான வீடு கிடைத்ததும் மது விருந்து என ஆடித்தீர்த்தான் ஒரு"வருடம் முடியும் தறுவாயில் வீட்டை சீர்ப்படுத்தி விடலாம் என நினைத்தான்
எதிர்பாராமல் முதலாளி ஆறு மாதத்திலேயே வந்து விட்டார் அலங்கோலமான வீட்டைப்பார்த்து டென்ஷனாகி அவனை துரத்தி விட்டார்
இன்னொரு வேலைக்காரன் இது நம்ம வீடு இல்ல எப்ப வேணும்னாலும் ஓனர் வரக்கூடும் என்ற எண்ணத்தில் வீட்டை அன்றாடம் சுத்தமாக பராமரித்தான் திடீரென ஒரு நாள் வந்து பார்த்த ஓனர் மகிழ்ந்து அவனுக்கு நல்லதொரு வீட்டை பரிசளித்தார்
அதுபோலத்தான் நம் வாழ்வு எப்போது வேண்டுமானாலும் கடவுள் இதை திரும்பக் கேட்பார் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரது உடைகளின் நேர்த்தி அழகான முகம் போன்றவை பேசு பொருளாக இருந்தன
அலங்கோலமான ஆடையில் ஷேவ் செய்யாத முகத்துடன் ஒரு ஃபோட்டோ கிடைத்தால் பரபரப்பாக இருக்குமே என பத்திரிக்கையாளர்கள் நினைத்தனர்;
ஒரு நாள் அவர் ஒரு வெளிநாட்டு பயணத்தில் ஹோட்டலில் தங்கி இருந்தபோது அதை ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு ஒரு போட்டோகிராபருக்கு கிடைத்தது..
இரவு நேரத்தில் சாதாரண ஆடையில் பார்த்து விடலாம் என இரவெல்லாம் தூங்காமல் இருந்தான்.
அவன் எதிர்பார்த்தது ஒரு நாள் நடந்தேவிட்டது
யாருடனோ பேசுவதற்கு நடுநிசியில் ராஜிவ் வெளியே வந்தார்
ஆனால் ஏமாற்றம்
நள்ளிரவிலும்கூட நேர்த்தியான ஆடை க்ளீன் ஷேவ் என்று இருந்தார்
பிற்காலத்தில் இதை நிருபரிடம் சிரித்தபடி சொன்னாராம்
பிரதமர் என்றால் 24 மணி நேரமும் பிரதமர்தான் எப்போதும் தயார் நிலையில் இருப்பது கடமை மற்றபடி இயல்பான தோற்றத்தில் போட்டோ வேண்டுமென்றால் என்னிடமே கேட்டிருக்கலாமே என்றாராம்
Readiness is everything
,,,
No comments:
Post a Comment