தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
-பாரதிதாசன்
தமிழ்நாடுதான் டாப்
1885,1886ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகள் பம்பாய் கல்கத்தாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்தது. அது இந்து பத்திரிக்கையை நிர்வாகியான மூடாம்பி வீரராகவச்சாரியார் தமிழில் எழுதிய காங்கிரஸ் வினா விடை எனும் பிரசுர நூல் வெளியிடப்பட்டது தான். இதன் விலை ஒரு அணா. தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் அது வெளியிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றிய தலைவர்கள் சென்னையில் தலைவர்கள் தமிழில் பேசினார். தமிழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் தான் கிராமப்புறத்தில் இருந்து பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தமிழில் பேசினார். முதன்முறையாக பொதுமக்களிடம் இருந்து இங்கு தான் நிதி திரட்டப்பட்டது. 8000 பேரிடம் 5500ரூ திரட்டப்பட்டது.
காங்கிரஸ் வினாவிடை புத்தகம் 30 ஆயிரம் பிரதிகள் விற்றும் நிதி திரட்டப்பட்டது. இம்மாநாடு மற்ற மாநாடுகள் போல் மண்டபத்தில் நடைபெறாமல் மைதானத்தில் நடைபெற்றது.
காங்கிரஸ் வினா விடை புத்தகம் மூலம் பொதுமக்கள் காங்கிரசில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தது கண்டு ஆங்கிலேயர் சற்று கதிகலங்கி தான் போனார்கள். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அச்சுறுத்தியது.சிறுபான்மையினரான படித்தவர்களின் ஆரவாரங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் புறநகரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை நாடியது.
அன்றைய வைஸ்ராய் லார்ட் டப்ரின் என்பவர் இந்த தமிழ் வெளியீடு முட்டாள்தனமானது என்று கண்டித்தார்.1920 இல் நாக்பூரில் நடந்த காங்கிரஸின் 35 வது மாநாட்டில் தான் காங்கிரஸ் மாகாண கமிட்டிகளை மொழி வழி திருத்தி அமைத்தது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே உருவானது. அவரவர் தாய் மொழியில் தான் விடுதலை உணர்வை தட்டி எழுப்ப முடியும். அதுதான் மக்கள் பங்கேற்க வகை செய்யும் என்பதற்கான விதை 1887ல் சென்னையில் தூவப்பட்டது. 1920 இல் நாக்பூரில் அதற்கான விடை கிடைத்தது. தமிழ்நாடு தான் மொழி வழி உணர்வில் முன்னிலை வகித்தது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
-விடுதலை தழும்புகள்
நற்காலை
No comments:
Post a Comment