Saturday, 11 March 2023

புடவை


புடவை

‘புடவை’ என்பது ‘புடைவை’ என்று இருக்கவேண்டும். ‘புடை’ என்றால் பக்கம், ‘மந்திரிகள் புடை சூழ முதலமைச்சர் வருகை தந்தார்’ என்று செய்திகளில் வருகிறதே, அதுதான். ஆக, ஒரு பெண்ணின் உடலை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி அணியப்படுகிற ஆடை என்பதால், அதற்குப் ‘புடைவை’ என்று பெயர் வந்தது. 

பின்னர் அது எப்படியோ ‘புடவை’ என்று திரிந்துவிட்டது. அதேபோல், ‘துணி’ப்பதால் (துண்டித்து / கத்தரித்து) விற்பனை செய்வதால், அது ‘துணி’. இதே காரணத்தால் ஆடைக்கு ‘அறுவை’ என்றும் பெயர் உண்டு (அறுத்துப் பயன்படுத்துவதால்).

-என்.சொக்கன்

No comments:

Post a Comment