#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-4
Book-10
Pages-287
போராட்டங்களின் கதை
-அ முத்துகிருஷ்ணன்
நிச்சயமாக ஜனநாயகம் நமக்கு அறவழியில் போராடும் உரிமைகளை வழங்குகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களை எதிரிகளாகப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது
போராட்டங்கள் என்பது வீண் வேலை.. போராட்டங்கள் என்பது ஒரு வன்முறை.. என்பது போன்ற பல கருத்துக்கள் பேசுபவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை ஒரு முறையேனும் படித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் உலகெங்கும் எளிய மக்களின் உரிமை குரலை பெற்று தந்தது இந்த வகையான போராட்ட வடிவங்களும் போராளிகளும் தான். இவர்களை புறந்தள்ளிவிட்டு நாம் போராட்டம் வீண் வேலை என்பதை வெறுமனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஜூனியர் விகடனில் தொடராய் வந்ததும்.. வாசித்த போது ஒவ்வொரு வாரமும் புதுப்புது மனிதர்களையும் புதுப்புது செய்திகளையும் நமக்கு அறிமுகப்படுத்தியது. புத்தகமாய் படிக்கும் போது இன்னும் ஒவ்வொரு போராளிகளையும் உள்வாங்கிக் கொள்வது எளிதாக இருக்கிறது.
1730 களில் ராஜஸ்தான் மன்னர் புதிய அரண்மனை கட்டுவதற்காக காட்டிலுள்ள மரங்களை வெட்ட வரும்போது அங்கிருந்து அமிர்தா எனும் பெண்மணியின் தலைமையில் தலைமையில் பெண்கள் மரங்களை கட்டித் தழுவிய படி நிற்கிறார்கள். அப்போது அமிர்தா தேவி உட்பட 260 பெண்களை வெட்டி சாய்கிறார் மன்னர். பின் திட்டத்தை கைவிடுகிறார். மீண்டும் மரங்களை வெட்ட முனையும்போது 1973 ஆம் ஆண்டு சாந்தி பிரசாத் பட் காந்திய இயக்க எதிர்ப்பின் காரணமாக சிப்கோ ஒரு இயக்கமாக வளர்ந்தது. அது குறித்த வரலாறு இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ளது.
நெல்சன் மண்டேலா ,காந்தியின் உப்பு சத்தியாகிரகம் குறித்த வரலாறு, வால் ஸ்ட்ரீட் பொருளாதாரம் கொள்கை யாருக்கு எதிரானவை நெவாடா பாலைவன அனுபவம் என்னும் இயக்கம்
மெர்லின் சுவர் இடிப்பு அமேசானின் கருப்பு வெள்ளை நாங்கள் ரோபோக்கள் அல்ல ஈராக் எதிர்ப்பு பங்காளி மாதா வைக்கம் எதிர்ப்பு மற்றும் பாலினத்தவரின் வரலாற்று போர் என்பது போன்ற கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன மேலும் பெட்டி செய்திகளில் ஒவ்வொரு தளத்தின் வீரர்களும் அவர்களின் வரலாற்றினை அறிய முடிகிறது
அதனோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை ஒரு ஆளுமைகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த வகையில் தமிழ்நாடு சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டுகள் வரலாறு என்ற புத்தகத்தை எழுதியவர் அருணனின் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விஷயங்களும் முந்தைய தலைமுறையின் இடையறாத குரலும் கோரிக்கைகளும் ஆகும். அது நிறைவேற்ற அவர்கள் எடுத்துக் கொண்ட கால அவகாசமும் இடையராத முயற்சிகளே இந்த நிலையில் நாம் தற்போது சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்களின் உரிமைக் குரலால் ஜனநாயகத்தின் தன்மை நிலை நாட்டப்படுகிறது. இயற்கை சுரண்டல் சூழலுக்கு எதிரான மனப்போக்கினை தட்டி கேட்பது,
தன்னலம் கருதாது உழைத்த மனிதர்களை எண்ணிப்பார்ப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. 44 அத்தியாயங்களில் நாம் வரலாறு தரும் பாடத்தை கற்காமல் மறப்போமேயானால் அதை மீண்டும் நினைவூட்டும் என்பதே வரலாற்று உண்மை
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment