Saturday, 22 April 2023

#30நாள்_வாசிப்புபோட்டி_2023#TD038Day-29Book-81Pages-349#இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு -பேராசிரியர் சோ முத்துக்குமரன் பேராசிரியர் மா சாலமன் பெர்னாட்ஷாசாதி மத வேறுபாடுகளை எல்லாம் கடந்து முதல் முறையாக அனைவரையும் சமமாய் அமர வைத்து சென்ற வாகனம் தான் ரயில் என்று என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய ஒரு பாடலின் மூலமாக சொல்லுவார். ஆங்கிலேயர்கள் தன்னுடைய தொழில் அபிவிருத்திக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்களுடைய பொருட்களை எடுத்துச் செல்லவும் முதன்முறையாக ரயில்வே அமைக்கும் திட்டம் இருந்தது2016 17 ஆம் ஆண்டு புள்ளி விவர கணக்கின்படி இந்தியாவில் 67 ஆயிரத்து 368 கிலோமீட்டர் வழித் தட இணைப்பில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து நானூத்தி ஏழு கிலோமீட்டர் இருப்புப்பாதை பயன்படுத்தப்பட்டுள்ளது .49 விழுக்காடு இருப்பு பாதை வழித்தடங்கள் 25 கிலோ வாட் எதிர் மின் கடத்தி வழித்தடங்களாகவும் 33 விழுக்காடு வழித்தடங்கள் இரட்டை இருப்புப் பாதைகளாகவோ அல்லது அதற்கு மேம்பட்டவாயாக உள்ளன .7349 ரயில் நிலையங்கள் நிலைத்திருக்கும் வகையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணியர் ரயில்கள் நீண்ட தொலைவு ரயில்கள் என பலவகைப்பட்டுள்ளன. 9,200க்கும் மேற்பட்ட சரக்கு ரயில் இயக்கப்படுகின்றன. இத்தகைய பிரமாண்டமான இயக்கத்தில் 2,77987 சரக்கு பெட்டிகளும் 70 ஆயிரத்து 937 பயணியர் பெட்டிகளும் 11,452 ரயில் இன்ஜின்களும் பயன்படுத்தப்படுகின்றன .உலக அரங்கில் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் இந்திய ரயில்வே எட்டாவது இடத்தை பிடிக்கின்றது இந்த வளர்ச்சியை பற்றி எடுத்துரைக்கும் நூல் தான் இந்நூல்.இந்திய ரயில்வே இயக்கத்தின் முன்னோடியாக சார் ஆர்தர் காட்டன் குறிப்பிடப்படுகிறார் ஆங்கிலேயரின் நிதி நிர்வாக சுமையை குறைப்பதற்கு இருப்பு பாதை அமைப்பது செலவை குறைத்துருமா என்பது குறித்து ஐந்து அறிக்கை இவர் தான் அளித்துள்ளார்.இவரின் முயற்சியினால் ரெட்ஹில்ஸ் ரயில் ரோடு நிறுவப்பட்டது. இதன் சோதனை முயற்சிகள் அனைத்திலும் கேப்டன் காட்டன் பங்கு அபரிமிதமாக இருந்தது. இருப்பு பாதையையும் அதன் மேல் சக்கரத்தின் நகரும் பாரஞ்சுமக்கும் பெட்டிகளையும் உற்பத்தி செய்திடும் பணி பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக சிறு தொலைவு இருப்புப் பாதையாக மலர்ந்தது. வாகனங்களை இயக்குவதிலும் மேடு பள்ளங்களை கடப்பதிலும் உள்ள இடங்களை எவ்வாறு சமாளித்தனர் என்பதை குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளதுகேப்டன் காட்டன் ரயில் சேவை அனுபவத்தையும் பெற்றதன் மூலம் அடுத்து திருச்சி கல்லணையை தூர் வாரும் பணியை நிறைவேற்றியவரும் கேப்டன் காட்டன் தான். மணல் படுக்கையில் அணை அடித்தளம் குறித்து இவர்தான் முதலில் சொன்னவர்.மேலும் வெள்ளப்பெருக்கின் போது வீணாக கலந்து விடும் கோதாவரி நதியின் ஒரு நாள் நீரும் தேம்ஸ் நதியின் ஒரு ஆண்டு முழுவதும் ஓடிடும் நீரும் சமம் என்று கருதி மேற்கு கோதாவரி மாவட்டங்களை நெற்களஞ்சியமாக மாற்றிடும் இவர்தான் ஈடுபட்டார்டல்ஹொளசி குறித்து சொல்லப்படும் போது 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இங்கிலாந்தில் ஸ்டாக்டன் மற்றும் டார்லிங்டன் இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது .இதற்கு உந்து சக்தியாக இருந்தது கம்பளி வர்த்தகம் தான். 1845 46 ஆம் ஆண்டுகளில் கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் இடையே முதல் இருப்பு பாதை அமைப்பதற்கான நில அளவை மேற்கொள்ளப்பட்டது. டல்ஹொளசியின் வழிகாட்டுதல் இந்தியாவில் துரிதமாக ரயில்வே சேவை வளர்ச்சி அடைந்தது .1869 ஆம் ஆண்டுக்குள் 89 கோடி ரூபாய் முதலீட்டில் 465 மைல் தொலைவு ரயில்கள் சேவைக்கு வழி வகுத்தது எனவே தான் இவரை இந்திய ரயில்வே சேவையின் தந்தை என்று நினைவு கூறப்படுகிறார்.ரயில் எஞ்சின் குறித்த கட்டுரை ஒன்றில் இந்தியாவில் ரயில்வே துறையை அறிமுகப்படுத்தும் தனது கனவை நினைவாக்கிட இந்தியாவில் தான் முதலில் முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தார் ஸ்டீவன்சன் மனைவி குழந்தைகளோடு 1843 ஆம் ஆண்டு இந்தியாவை அடைந்தார். இந்தியாவுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாதது ரயில்வே துறை .எனவே ரயில்வே துறை பற்றிய தகவல்களை முதலில் மக்களிடையே அதிகார வர்க்கத்தினையும் பரப்புரை செய்வது அவசியம் என உணர்ந்தார். எனவே இதற்கு ஏற்றார் போல் இங்கிலீஷ் மேன் என்ற ஆங்கில தினசரியை தொகுத்து நிர்வகித்து வெளிவிடும் பொறுப்பு ஸ்டீவன்ஷனுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் எவ்வாறு ரயில்வே சேவையை இந்தியாவுக்கு அளித்தார் என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது.தொடக்க முதல் இறுதி நிலை வரையிலான அனைத்து செலவுகளுக்கும் திட்ட நிதி இவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து செலவுகளும் என்பதில் நில அளவை இருப்புப் பாதை அமைத்தல் பாலங்கள் அமைத்தல் பயணியர் பெட்டிகள் நீராவி இன்ஜின்கள் இயந்திர உபகரணங்கள் போன்றவை போதுமான எண்ணிக்கையில் வாங்குதல் என சகலமும் அடங்கும். திட்டத்தை நிறைவு செய்திடும் திட்ட காலமும் நிர்ணயிக்கப்பட்டது. இது அக்காலத்துக்கு முன்பே முடிந்து விட்டது. இதனால் திட்ட செலவில் 20 விழுக்காடு தொகை மீதமானது. இவை எல்லாம் ரயில்வே திட்டத்தின் அளப்பரிய சாதனைகள் எனலாம். அனைத்திற்கும் மேலாய் இந்தியர்கள் பத்தாயிரக் கணக்கில் இத்திட்டத்தில் பணியமர்த்தப்பட்டனர். 4 ,5 மடங்கு கூடுதலாய் ஊதியம் பெற்றனர். இவை அனைத்தும் நேர்மையான கடின உழைப்பால் விரைவில் கற்றுக் கொள்ளும் திறனால் இவர்களுக்கு கிடைத்த ஊதியம் என்று சொல்லப்பட்டதுஇவ்வாறு அடுத்தடுத்து கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனி, நதி மூலம் பயணித்தல், சுரங்கத்தில் பயணித்தல் பெர்க்லியின் அபார திட்டம் மழையேற்றத்தை கடத்தல் அரிது மலையேற்ற பாதைகளில் எவ்வாறெல்லாம் ரயில்களை இயக்குதல், மெட்ராஸ் ரயில்வே கம்பெனி அதன் சோதனை ஓட்டத்தில் கடந்த ஊர்கள் என பல்வேறு ரயில்வே கம்பெனிகள் குறித்து விரிவாக இதில் சொல்லப்பட்டுள்ளது.அக்காலத்தில் சிப்பாய் கழகத்தில் இந்திய ரயில்வே எவ்வாறு எல்லாம் உதவியது இந்தியர்களுக்கு. ரயில் விபத்துக்கள் புரட்டிப்போட்ட பஞ்சமும் தூக்கி நிறுத்தி ரயில்வே போன்றவை பல்வேறு மாநிலங்களை இணைப்பதற்கு பயன்படுத்தி ரயில்களின் விவரங்கள், ஸ்டேட் ரயில்வேயும் தனியாருக்கு தாரை பார்க்கும் நிகழ்வுகள், புதிய உத்தரவாத ஒப்பந்தங்கள் என ரயில்வே துறை சந்தித்த பல்வேறு இடர்பாடுகள் முயற்சிகள் அதையெல்லாம் மீறி ரயில்வே எவ்வாறு எல்லாம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது என்பதை குறித்து எல்லாம் இந்த புத்தகத்தில் மிக விரிவாகவும் அழகாகவும் வரலாற்று பின்புலத்தோடும் இந்த நூல் சொல்லப்பட்டுள்ளது தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment