Thursday, 6 April 2023

Book-30


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-12
Book-30
Pages-651

எனது கலைப்பயணம்
-வி.கே ராமசாமி

சபரிமலையில் மலை ஏறும்போது ஒரே கூட்டம்.. பின்னால் இருப்பவர்கள் முந்தியடித்துக் கொண்டு போகிறார்கள்.ஒரு பாறையின் அமர்ந்து கொண்ட வி.கே.ஆர்.. "என்ன இவ்வளவு வேகமா போறீங்களே? முதல்ல வர்ற சாமிகளுக்கு ஐயப்பன்  கப்பு  எதுவும் கொடுக்கிறாரா! என்றாராம்.அந்த இடத்திலும் அவர் நகைச்சுவை குறையவில்லை.

*Judge : Mr.V.K.R எதுக்கு உங்க வீட்ட விக்கறீங்க??

V.K.ராமசாமி : எனக்கு இருக்கற கஷ்டத்துக்கு அந்த தெருவையே விக்கணும். வீட்டோட விட்டுட்டேன்..

*பூவே பூச்சூடவா க்ளைமேக்ஸ் காட்சி..பரபரப்பா போகும் போது..ஃபாதர் கேரக்டர் கேட்பாரு கொஞ்சம் அவசரம்..உடனே வி கே ஆர் உள்ள பாத் ரூம் இருக்கு போய்ட்டு வாங்கனு

இதுபோல் டைமிங் காமெடியை தனக்கே உரித்தான பானியில் சொல்பவர் தான் வி.கே.ஆர்.சிவாஜியுடன் நாடக வாழ்க்கையிலிருந்து அறிமுகம்.ராமுனு தான் கூப்பிடுவார்.நாம் இருவர் படம் தான் வி.கே ஆரின் முதல் படம். நாடக உலகிலிருந்து திரை உலகிற்கு பெரிய ஏற்றம்.இளமை நினைவை பகிரும்போது மனோன்மணி படத்தில் என்.எஸ் கே யுடன் யதார்த்தம் எனும் கேரக்டரில் நடித்த பொன்னுசாமி பின்னால் தன் பெயரோடு யதார்த்தம் ஒட்டிக் கொண்டது.இவர் உரிமை பெற்று நடத்திய இழந்த காதல் நாடகம் ராதாவுக்கு எம்.ஆர் ராதா பட்டம் பெற்று தந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு இடத்திலும் எதார்த்தம் பொன்னுச்சாமியை மனதார புகழ்ந்து இருப்பார் கிட்டத்தட்ட இவருக்கு குரு போலவே அவரை நினைத்துக் கொள்வார்.

சூர்ப்பனகை நாடகத்தில் இயக்குனர் ஏபி நாகராஜன் அவர்கள் பெண் வேடமிட்டு நடித்ததை மிகவும் சிலாகித்து சொல்லியிருக்கிறார். இருவரும் இணைந்து தமிழகத்தில் வந்த முதல் வட்டார மொழி படமான மக்களைப் பெற்ற மகராசி படம் அந்த படத்தில் மருதகாசி எழுதிய பாடல் மிக பிரபலமானது .அந்த படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏபி என்னும் விகே ராமசாமியும் பிரிந்து விட்டனர். அதற்குப்பின் ஏபிஎன் படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஊரிலும் நாடகம் போடச் சென்றதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருப்பார் அந்த நாடகத்தில் நடித்த நடிகர்கள் நாடகத்தின் வசூல் நாடகத்தின் போது நடந்த சுவையான சம்பவங்கள் கிட்டப்பா பாகவதர் போன்ற நாடகத்தை பார்த்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு என நாடகத்தை நாமும் அருகில் இருந்து பார்ப்பது போல மிகவும் ரசித்து சொல்லி இருப்பார். பிரகலாத நாடகத்தில் இரணியன் குடலை உருவி முடித்ததும் மீண்டும் மீண்டும் வயிற்றை தடவ அதில் நடித்த சிறுவன் அடேய் உண்மையான குடலை பிடுங்கி விடாத என்று கேட்டதும் மக்கள் சிரிக்கும்படி ஆகிவிட்டது அதனால் அடுத்த நாளே நாடகத்தை மாற்றி விட்டோம். அரங்கேற்ற வேளையில் அவர் நடித்திருக்க மாட்டார் அனேகமாக அந்தக் காலத்தில் வாழ்ந்ததை நமக்கு நினைவூட்டி இருக்கிறார்.

இதேபோல் வள்ளி திருமணம் நல்லதங்காள் பவளக்கொடி அல்லி அர்ஜுனா வன சுந்தரி போன்ற புகழ்பெற்ற நாடகங்களும் , பக்தி இலக்கியமும் சுதந்திர தாகம் கொண்ட நாடகங்களும் காந்திய சிந்தனை கொண்ட நாடகங்களும் அப்போது பெருமளவில் நடத்தப்பட்டன ஒரு காலத்தில் நாடகத்தில் போதிய வருமானம் இன்மையால் எதார்த்தம் பொன்னுசாமி மிகவும் வேதனை உற்றார். நாடகத்தை நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தபோது கலைவாணரை சென்று பார்த்தோம். அப்போது அவர் கல்கி புத்தகத்தை கொடுத்து முப்பதாம் பக்கம் நல்ல கதை இருக்குது அதை பாருங்க என்றார். நாங்களும் அப்போது பிரித்து பார்த்தால் நன்றாக இருக்காது என்று எண்ணி வெளியில் வந்து பிரித்துப் பார்த்தோம் முப்பதாம் பக்கம் பணம் இவ்வளவு நாசுக்காக உதவி செய்யும் வள்ளல் குணம் என்.எஸ் கேவை தவிர யாருக்கு இருக்க முடியும்.

உலகப் போர் சமயத்தில் நாடக நடிகர்கள் யுத்த களத்துக்கு தேவையான பணத்தை வசூலிப்பதற்கு நாடகம் நடத்த வேண்டும் என முடிவு செய்தனர் ஆனால் பி யு சின்னப்பா ஆங்கிலேயன் யுத்தம் நடத்துவதற்கு நாம் ஏன் பணம் தர வேண்டும் என்று
உறுதியாக மறுத்துவிட்டார் அவரின் நாட்டுப்பற்றை அன்றி அனைவரும் மெய் சிலிர்த்து பாராட்டினர்.
இதேபோல் தமிழ்நாடு தலைமை ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் மிகத் திறமையானவர் பல்வேறு நாடகங்களை தத்துவமாக எடுப்பவர் அவரது நாடகங்களில் ஆங்கிலப் பாடல்களையும் இசை அமைப்பாளர் 60க்கும் மேற்பட்ட ஆங்கில பாடல்களை எழுதியவர் அவர் சிறப்பு

இவருக்குப் பின் பம்மல் சம்பந்த முதலியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் பின்பு வக்கீல் ஆனார்.1902 ஆம் ஆண்டு ஷேக்ஸ்பியர் எழுதிய as you like it நாடகத்தை தமிழில் விரும்பிய விதம் என்று எழுதினார். அவரைத் தொடர்ந்து தமிழ் நாடக உலகில் எஸ்வி சகஸ்ரநாமம் எம்ஜிஆர் சிவாஜி எஸ் எஸ் ஆர் மற்றும் புகழ்பெற்ற ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் கல் நாடக சபாக்கள் நாடகங்களில் நடித்த பெண் நடிகைகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பட்டியலிட்டு இருக்கிறார்.

புத்தகம் முழுக்க நாடக அனுபவத்தையும் அதில் நடித்த அனுபவத்தையும் பதிவு செய்துள்ளார். சினிமா அனுபவத்தை ஆங்காங்கே சொல்லியுள்ளதோடு சரி. இவருடைய சினிமா பயணத்தை சொல்ல வேண்டுமானால் இன்னும் ஒரு பெரிய புத்தகத்தை எழுத வேண்டும் .ஆனாலும் தான் நடித்த நாடக அனுபவத்தை பற்றி நாடக நூலாகவே முழுக்க முழுக்க பதிவு செய்துள்ளார் ஒவ்வொரு நாடகக் கலைஞர்களையும் மனதார பாராட்டியுள்ளார். நாடகத்தின் மீதுள்ள இவரின் பக்தி ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment