#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-14
Book-36
Pages-403
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
-ராஜ் சிவா
இதன் எழுத்தாளர் ராஜ் சிவா அவர்கள் ஒரு அறிவியல் எழுத்தாளர். உண்மையை உண்மையாக அறிவியல் ரீதியாக சொல்பவர். சுவாரசியமாக நடந்த சம்பவங்களையும் விந்தைகளையும் வினோதங்களையும் ஆர்வத்தினால் ஏற்படுத்தினாலும் அதை அறிவியலால் ஏற்க முடியாதவை. தெரிந்து கொள்ளும்போது வியப்பூட்ட தூண்டுபவை. இப்படியும் நடந்திருக்கின்றன அவற்றை தெரிந்து கொள்ளுங்கள் என்று நமக்கு தங்கத் தட்டில் வைத்து பல வினோதமான நிகழ்வுகளையும் நமக்கு ரசிக்கும்படி சொல்லி இருப்பார் .இந்த வாசிப்பு பாதையில் முடிந்தவரை வழிகாட்டி உள்ளார் அவரின் பாதையில் நடக்கும் போது பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 50 தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் அறிவியல் ரீதியாகவும் உலகில் நடந்த வினோதமான சம்பவங்களையும் நமக்கு தொகுத்துக் கொடுத்துள்ளார்.
முதல் கட்டுரையே வித்தியாசமானது யார் அந்த மோனோலிசா. மோனோலிசாவின் ஓவியத்தை பார்க்காதவர் புகழாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அந்த மோனோலிசா ஓவியம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டபோது அது களவாடப்பட்டது .இதை கண்டுபிடிப்பதற்கு முன் வேறொன்று வரையப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதையும் அந்த ஓவியத்துக்கு பின்னால் இப்படி ஒரு சுவாரசியம் நடந்து இருக்கிறதா என்பதையும் இந்த கட்டுரையில் அறிந்து கொள்ள முடிகிறது.
ரஷ்ய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு ஏலியனோ தேவதையோ வந்து பூமிக்கு சென்று விடுங்கள் என்று கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு நிகழ்ந்ததாக இல்லையா என்பதை நமது யூகத்துக்கு விட்டுவிட்டு இருக்கிறார் ஆசிரியர்
காணும் கனவுகளை விருப்பம் போல் மாற்றிக் கொள்ளலாம். கெட்ட கனவு ஒன்றை நல்ல கனவாக மாற்ற முடியும். தங்கள் விருப்பத்திற்கேற்ப கனவுகளை மாற்ற முடிந்தவர்களை லூசிட் கனவாளிகள் (லூசு களவாணிகள் என்று டைப் வருகிறது அதை அப்படியே விட்டு விட்டேன்) என்கிறார்கள். கனவு காண்பவர்களில் ஒரு சிலர் கனவை மறந்து விடுகிறார்கள். நான் கனவே காண்பதில்லை என நினைக்கிறார்கள். சிலர் தினமும் நான்கிலிருந்து ஆறு வரை வெவ்வேறு கனவுகளை காண்கிறார்கள். வாழ்நாளில் ஆறு ஆண்டுகளை கனவு காண்பதில் கழிக்கிறான். நித்திரை கொள்ளவும் மனத்திலிருந்து தான் கனவு காண ஆரம்பிக்கிறோம் .ஆனாலும் தெளிவான கனவுகள் ரெம் உறக்க நிலைகளிலேயே வருகின்றன (ரேபிட் ஐ மூவ்மெண்ட் )இந்த ரெம் தான் கனவுகளை அள்ளித் தரும் அட்சய பாத்திரம். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்புள் நுழையும் கனத்தில் இருந்து ஆரம்பம் ஆகிறது. மூளை விழித்துக் கொள்ள தயாராகிறது. இது போன்ற கனவுகள் குறித்து மேலும் மேலும் இதில் சொல்லி இருக்கிறார்.
விந்தைகளும் மர்மங்களும் அதிகம் புதைந்திருப்பது எகிப்தில் தான் என்கிறார்கள். சீசர் ஆண்டனி பலரை திருமணம் செய்து சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் கிளியோபாட்ரா. அவள் எங்கிருந்து வந்தாள் என்ற வரலாறு தான் இந்த கட்டுரை இருக்கிறது. எகிப்த்தியர்கள் ஆமென் எனும் கடவுளை வழிபட்டு வந்தார்கள். ஒரு மன்னன் நெஃபெர்ட்டி எனும் பெண்ணை மணந்ததும் எல்லாம் மாறிப்போனது. எகிப்தின் வரலாற்றை திருப்பி போட்ட திருமணம் என்கிறார்கள். ராணியாக மட்டுமில்லாமல் உயர் பூசாரிக்கவும் ராணி இருந்தால் ஆமனை வழிபட்டு வந்தவர்கள் அதற்கு பின் ஆடமை வழிபட ஆரம்பித்தனர். அதன் காரணமாக உண்டான குழப்பமும் கலவரங்களும் எவ்வாறு சரி செய்தார்கள் என்பதை கட்டுரை சொல்கிறது.
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் ஹிட்லரின் நாசிப்படைகளில் உயர் அதிகாரிகளை கைது செய்து மரணம் தண்டனை கொடுத்தவர்கள்.நியூர்ன் பேர்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தண்டனைகள் நிறைவேறின. 1600 ஜெர்மானிய விஞ்ஞானிகளை அமெரிக்காவும், 2000 நாசி விஞ்ஞானிகளை சோவியத் ரஷ்யாவும் ரகசியமாக அழைத்துச் சென்றனர். முக்கிய திட்டங்களை தங்கள் நாட்டுக்கு நிறைவேற்றித் தரும் பொருட்டு அதன்படி வான்வெளி ஆயுதங்களை தயார் செய்த வேர்னர் ஃபொன் பிரவுன் என்பவரை பிரபலமான சேட்டன்5 ராக்கெட்டை தயாரித்தவர் .அவரே அப்பல்லோவை சந்திரனுக்கு அனுப்பவும் உதவியவர் .இதெல்லாம் பின்னால் ரகசியமாக கசிந்தன.
எகிப்து அமைக்கப்பட்டிருக்கும் மூன்று பிரமிடுகளான உலக அதிசயங்களில் மென் கவ்ரே பிரமிட், காஃப்ரெ பிரமிட்,கூஃபு பிரமிட். இவற்றில் பெரியது கூஃபு பிரமிட் தான். இதில் உள்ள கீ சாப்பிடற மாதிரி எப்படி கட்டப்பட்டது என்பதை இதுவரை தெரியாத மர்மமாகவே இருக்கிறது பிரமிடுகளை ஆராயும் ஈஜிப்டாலஜி எப்படி கட்டப்பட்டன என்பதை விளக்குகிறார்கள் ஆனாலும் விடை கிடைக்கவில்லை. யானைகளை கொண்டு பிரமிடுகளை கட்டப்பட்டதாக சொல்கிறார்கள் அது தவறு .யானைகளை குதிரைகளும் அக்காலத்தில் இல்லை. எகிப்தில் குதிரைகள் அறிமுகம் ஆகியது 3500 ஆண்டுகளுக்கு பின்னர் தான். இவை ஒருவித சுண்ணாம்பு கற்களாலும் கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது.
ஆனால் மலைகளோ இடங்களோ அங்கு இல்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான அடிமைகளை கொண்டு கட்டி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 146 மீட்டர் உயரம் கொண்ட கீஸா பிரமிடு 23 லட்சம் கற்களை கொண்டு ஒவ்வொரு கண்டும் 2500 கிலோவில் இருந்து 80 ஆயிரம் கிலோ வரையிலான கற்கள் உள்ளன. பிரமீட்டின் மொத்த எடை 65 லட்சம் டன் என்கிறார்கள். உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அரசனின் கல்லறை 25 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட கற்கள் வெளிப்பகுதி 2500 கிலோ சுண்ணாம்பு கல்லால் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் .இவை எல்லாம் 850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைகள் இருந்து வெட்டி எடுத்ததாக சொல்கிறார்கள். நைல் நதியில் கற்களை மிதக்க விட்டு கொண்டு செல்வதாகவும் சொல்கிறார்கள் இவ்வாறு சில மர்மங்கள் இன்னும் அவிலாமலேயே இருக்கிறது என்கிறார் கட்டுரையாளர்.
நேரம் பற்றி சொன்ன கட்டுரையை சுவாரசியமானது. நேரம் என்பது என்ன? நேரத்தில் மர்மம் இருக்க முடியுமா? நேரம் ஒரு மாயை என்கிறார்கள். அவை மாயை அல்ல .சிறுவயதில் அல்லது வேலை கிடைக்காத போது நேரம் அதிகமாக இருந்ததை உணர்ந்தீர்கள் .ஆனால் தற்போது நேரம் குறுகிவிட்டதாக எண்ணுகிறீர்கள் .ஒவ்வொரு நொடிக்கும் ஒரு நொடியாக ஒரே இடைவெளியில் கடப்பது தான் நேரம் என்று நாம் நம்புகிறோம். நிஜத்தில் அப்படியல்ல ஐன்ஸ்டீன் கூறியதைப் போல நீங்கள் அசையாமல் நிற்கும் போது உங்கள் நண்பர் வேகமாக கடந்து சென்றாலும் உங்கள் கடிகாரத்தின் நேரத்திற்கும் அவரது கடிகாரத்தின் நேரத்துக்கு வித்தியாசம் இருக்கும் என்றார்.
மனிதனின் வேகத்தை பொறுத்து அவனின் நேரமும் மாறுகிறது. வேகத்தை ஒருவன் அடைந்து விட்டால் அவனுக்கான நேரம் பூஜ்ஜியத்தை அடைந்து விடும். ஈர்ப்பு விசையை குறைய குறைய நேரமும் மெதுவாகும் .உயரம் மேலே போக போக ஈர்ப்பு விசை குறைய ஆரம்பிக்கிறது. கடல் மட்டத்தில் வசிக்கும் ஒருவரின் கடிகாரத்தை விட மலை உச்சியில் வசிப்பவரின் கடிகாரம் மெதுவாகவே நகரும் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கிழக்கு மாநில மக்களான அருணாச்சல பிரதேசம் சிக்கிம் போன்றோர்கள் சொன்னது நினைவு இருக்கலாம். ஏனெனில் நேரம் மாறுபாடு தான் காரணம் என்று சொன்னார்கள் .இந்த கட்டுரையை படிக்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது. இதுபோல ஒவ்வொரு கட்டுரையும் நம்மை சிந்திக்க தூண்டி பல்வேறு விஷயங்களை நாமே ரி கலெக்ட் செய்யும் விதத்தில் அமைந்திருக்கும். பல சொற்கள் அறிவியல் முறையில் இருப்பதால் சற்று கடினமாக இருந்தாலும் அவை சுவாரசியமாக தந்திருக்கிறார் நூலாசிரியர் ராஜ் சிவா அவர்கள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment