#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-22
Book-60
Pages-489
பதிவகள்
-கி.ரா
எழுத்தாளன் அனுபவம் எழுத்துக்கான அடித்தளமாய் அமைகிறது.எந்த நூலிலும் இல்லாமல் கி.ராவின் முழுமையான தரிசனத்தை இந்நூலில் காணலாம் என்கிறார் கழனியூரன். திருநங்கைகள குறித்து ஆராய்ந்த போது மகாபாரதம் தவிர்த்து இவர்கள் குறித்து கதைகள் எங்கும் கிடைக்கவில்லை என கூறி தேடி அலைந்து தொகுத்த கதையைக் கூறுகிறார்.
நன்றி சொல்லும் பகுதியில் முதல் உருண்டை சாதத்தை எடுத்துக் கொள்ளும் போதும் முன்னோர்களுக்கும், இரண்டாம் உருண்டை சாதம் எடுத்துக் கொள்ளும் போது உழவர்களுக்கும், மூன்றாவது உருண்டை சாதம் எடுத்துக் கொள்ளும் போது பசியோடு தவிப்போரையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
தமிழில் முதல் நாவல் வேதநாயகம் மாயூரம் பிள்ளஒ எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று சொல்வதுண்டு. ஆனால் வித்வான் சேஷையா 1875ல் எழுதிய ஆதியூர் அவதான சரித்திரம் எனும் செய்தி புதிதாய் இருந்தது.அது கவிதையில் நாவல் என்கிறார்கள்.
செம்மறி என்ற ஜாதி இருந்தது என பலருக்குத் தெரியாது.தமிழில் செம்மான் என்று அழைக்கின்றனர்.தையல் இயந்திரங்கள் வராத காலத்தில் துணிகளை சலவை செய்து வருவது போல் கிழிந்த துணிகளை தைத்து கொண்டு வரும் தொழில் செய்து வந்ததால் இவ்வாறு அழைத்தனர்
என்ற செய்தியும் மழை குறித்து தமிழில் வழங்கும் ஊசித்தூற்றல் ,சாரல்மழை உள்ளிட்ட 41 சொற்கள் வழங்கப்பட்டன.
வேளார் என்பது மண் பாண்டம் செய்பவர் சமூகத்தை குறிப்பது.வேள் என்பது மண்ணைக் குறிப்பது.இதில் இருவகையினர் உண்டு.கருப்பு பானை செய்பவர்கள் சிவப்பு பானை செய்பவர்கள் என இருவகையினர் உண்டு.அதோடு பச்சரிசி புழுங்கல் அரிசி சாப்பிடுவோர் இருவகையினர் பெண் கொடுத்து பெண் கொடுப்போர் இல்லை.கொசுறாக இதேபோல் நன்னீர் மீன் பிடிப்போர் உப்பு நீர் மீன் பிடிப்போர் என இவர்களும் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை
புதுமைப்பித்தனுக்கு நாதஸ்வரன் வாசிக்க ஆர்வம். கொண்டு ஒரு நாதஸ்வரம் வாங்கினாராம். அதனைப் பற்றி கதையைச் சொல்லி..வீணையின் இசை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். வீணையின் இசை முதலில் கேட்கப்படும் போது அவஸ்தையாக இருந்தததாகவும் அதன் பின் ஜாதிமல்லி என்கிற் பூ, பூர்வீகத்தில் ஏகப்பட்ட இதழ்களை வைத்துக் கொண்டு லோல்பட்டு கடைசியில் ஐந்து இதழ்கள் போதுமென்று தீர்மானித்ததாம்..என்பார் ரசிகமணி. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வதத்தில் பல் சீர்திருத்தங்கள் செய்தார்.
வீணை பாடுவதற்கு ஒரு துணை வாத்தியமென பெயர் உண்டு.இதுபோல் வீணை பற்றி அரிய செய்திகள் இக்கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.
*நான்கு திசைகள் சேர்வதை முக்குகள் என்கிறார்கள்.தென்கிழக்கு இதனை உப்பு மூலை என்கிறார்க்ள்.தென்மேற்கு மூலை கன்னிமூலை என்கிறார்கள்.பெண் வயதுக்கு வந்தால் இங்கு தான் உட்கார வைக்கிறார்கள்.வடகிழக்கு ஈசான மூலை. கங்கை மூலை என்கிறார்கள். குடிதண்ணீர் இங்குதான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.இங்கு நந்தவனம் இருப்பது நல்லது என்கிறார்கள்.
வசவு பத்திசொல்லும் போது மூத்தவ என்பது வசவுதான்.கிரா முதலில் கேள்விப்பட்டவசவு தான் இது என்கிறார்.மூத்தவள் என்பது மூதேவி என்பதை மூதி என்கின்றார்.மூதேவியை செல்லமாக மூதி என்று செல்லமாக சொல்கிறார்களாம். திருநெல்வேலியில் இந்த வசவு சாதாரணம். ஏ மூதி, ஆக்கங்கெட்ட மூதி,என்று சொல்லப்பட்டு வருவதற்கான காரணத்தை நாட்டுப்புற கதைகளின் உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார்.
*நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் சோகவியல் நூலை நகைச்சுவையாக சொல்கிறது.
*வாய் பதனம்/கை பதனம்/சுகனம் பதனம்
*ஆணுக்கு பிறந்த ஜாதகம் உண்டு என்றால் பெண்ணுக்கு ருது ஜாதகம் உண்டு.அந்த ரத்தம் கண்ட நேரம் மெய்யான பெண் என்பவள் பிறக்கிறாள் என்பது அர்த்தம்.
*சரியான வாதம் வேறே ; நடைமுறை விவாதம் வேறு
*ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு. நம்ம ஐயங்காருக்கு மூணு கொம்பு-சொலவடை
கி.ராவின் நாட்குறிப்பிலிருந்து சொல்லும் அனைத்து சம்பவங்களும் சுவையானவை. தான் கண்டு கேட்டு ரசித்த சம்பவங்களையே சொல்லியுள்ளார். எல்லாவற்றையும் அனுபவித்து அறிவது இயலாத காரியம். ஆனால் இது போன்ற அனுபவ மொழிகளை கேட்பது பேரின்பமே
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment