Wednesday, 19 April 2023

book-73


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-26
Book-73
Pages-1000

 விகடன் 1000
நூற்றாண்டுப் பயணம்

விகடன் வாசகரானது 2006 ஆம் ஆண்டில் தான். அன்றில் இருந்துதான் வார வாரம் விகடன் வியாழக்கிழமை வாங்கி விடுவேன். எங்கள் இல்லத்தை அலங்கரித்தது. ஏற்கனவே விகடன் வந்த பொக்கிஷம் மற்றும் காலப் பெட்டகத்தை பத்திரமாக வைத்திருந்து இந்த புத்தகமும் அந்த வகையில் ஒரு நூற்றாண்டு பயணத்தை நாம் கைகளில் ஏந்தி படிக்க வைத்திருக்கிறது. 1926 வது ஆண்டு முதல் ஆரம்பித்த விகடன் இன்று நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது பூதூர் வைத்தியநாதன் ஐயரிடம் இருந்து வாசன் அவர்கள் வாங்கிய பத்திரிகையை நாம் அறிவோம். ஆனால் அவரைப் பற்றி ஏகே செட்டியார் அவர்கள் நல்லதொரு கட்டுரையை ஆரம்பத்திலேயே எழுதியிருக்கிறார்

விகடன் தாத்தா 1928 இதழில் விகடன் பேச்சு மூலமாக சி.வி மார்க்கம் அவர்களால் பிள்ளையார் சுழி போடப்பட்டு படிப்படியாக கோடு நெற்றி பொட்டு என்பதெல்லாம் பரிணாமம் எடுத்து 32 ஆம் ஆண்டு மாலியின் பிரவேசம் நிகழ்ந்த போது தமாசாக இருக்க வேண்டும் என்பதால் விகடன் தாத்தா உருவானார். தியாக பூமியை தொடர்கதை வெளியாக இருப்பதை குறிக்கும் அறிவிப்பில்தான் 1938 இல் விகடன் தாத்தாவின் உருவம் முதல் முறையாக பக்காவான லோகோவாக அமைந்திருக்கிறது.

என் எஸ் கே குறித்த கட்டுரையில் ராமசாமி என்ற நடிகர் ..திருடன் வேடத்தில் நடித்த போது திடீரென அவரை காணவில்லை. எங்கே அந்த புளி மூட்டை என்றிருக்கிறார் உடனே அவருக்கு புளிமுட்டை ராமசாமி என்ற பெயரானது. அதேபோலத்தான் பொன்னுசாமி பிள்ளைக்கும் எதார்த்தம் என்ற பட்ட பெயர் கலைவாணரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கலைவாணர் கடைசியாக அரசு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு வந்து குவிந்த பழங்களை தனியாக ஆள் நியமித்து சாறு பிழிந்து மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் கொடுக்கச் செய்தாராம்.

ஜூனியர் விகடன் என்பதற்கான பெயர் காரணம் தனது அலுவலகத்தில் பணிபுரிகிற பி எஸ் பாலசுப்பிரமணியம் தான் இந்த பெயரை பேச்சுவாக்கில் முதலில் சொன்னால் அவரின் ஐடியா குழந்தைகளுக்கான புத்தகமாக இருக்க வேண்டும் என்று ஆனால் நான் விகடனுக்கு ஜூனியர் என்பது தான் இந்த பத்திரிக்கையின் எண்ணமே தவிர குழந்தைகள் பத்திரிக்கை அல்ல என்று முடிவெடுத்தேன் என்று ஆசிரியர் பாலசுப்பிரமணியம் தெரிவிக்கிறார். ஒருமுறை ஜூனியர் விகடனை வைரமுத்து அவர்கள் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஆனந்த விகடன் அட்டை படத்தில் மட்டும் வந்தால் போதும் ஜூனியர் விகடன் அட்டை படத்தில் வரவேண்டாம் என்று தமாசாக கூறினார் ஆசிரியர்.

இயக்கத்திற்கு புலி முத்திரைக்காக சரியான புலி படம் தேடி அத்தனை மெனக்கெட்டோம். சிவகாசி பட்டாசு உள்பட .உலகில் உள்ள அத்தனை புலிகளின் படங்களையும் பரிசீலித்தோம் .நாளைக்கு அதை விட ஒரு படம் பார்த்தால் அதை பயன்படுத்தி இருக்கலாமே என்று தோன்றக்கூடாது பாருங்கள். என்கிறார் ஒரு பெர்ஃபெக்க்ஷனிஸ்டாக வேலுப்பிள்ளை அவர்கள்

2012 ஆம் ஆண்டு அப்போது விகடனில் வைரமுத்துவின் நேர்காணல் வந்திருந்தது அதில் அவர் சொன்ன ஒரு துணுக்கு இப்போதும் படித்ததை நினைத்துக் கொள்கிறேன். "ஒரு குடும்பமே தற்கொலைக்கு எண்ணும் போது.. எவ்வாறெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த கடைசி குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது "அப்பா சாவதற்கு இத்தனை வழிகள் இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா? என்று .உடம்பையும் உயிரையும் ஆடி அதிர வைத்த கேள்வி அது என்கிறார்.

சகோதரி படத்தில் தன் கதாபாத்திரம் தேவைப்படுவதாக ஏவிஎம் சொன்ன போது ஒரு பாத்திரத்தை உருவாக்கி எங்கெங்கே நுழைக்க வேண்டும் என்று தீர்மானித்து மூன்றே செட்டில் நடித்துக் கொடுத்து விட்டார். அதில் "நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க" என்ற பல்லவி என்னுடையது மிச்சம் கண்ணதாசனுடையது என்று சொல்லி இருப்பார் சந்திரபாபு.

இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி ஆன குழந்தைகளையும் அவரது பெற்றோர்களையும் பேட்டி மருத்துவத்துறையின் மகத்தான இன்னொரு பாய்ச்சலை அப்போது விளக்கி இருந்தது.
ராஜீவ் கொலையின் போது புகைப்படக்காரர் எம்ஏ பார்த்தசாரதியின் பேட்டி மாஸ்

ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்வதில் மர்மம் என்ன என்ற கேள்விக்கு சுஜாதா அளித்த பதில் அனபாலிக் ஸ்டீராயுடுகள் நம் உடலில் இயற்கையாக இருக்கும் டெஸ்ட்டாஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவை அதிகப்படுத்துகிறது. இது தசைகளின் வலுவை அதிகரிக்கிறது. ஓட்டக்காரர்கள் நீச்சல் வீரர்கள் புதிய சாதனை அடைய தற்காலிக வலிமைக்கு உதவுகிறது. நமது சிறுநீரில் இந்த விகிதம் 1:1 என்று இருக்க வேண்டும் இந்த விகிதம் 1:5 என்று இருந்தால் வீரருக்கு தடை.

இந்தியாவிலேயே மூன்று தியேட்டர்களை ஒரே இடத்தில் அமைத்தவர்கள் சஃபையர் தியேட்டர் உரிமையாளர்கள் தான். இடைவிடாத காட்சிகளை நடத்துபவர்கள் தியேட்டரில் முதன்முதலாக டேப் ரெக்கார்டு செய்யப்பட்ட விளம்பரங்களை அறிவித்தவர்கள். முதன் முதலாக சென்னையில் அழகி போட்டிகள் நாடகங்கள் ஆகியவற்றை தியேட்டரில் நடத்தியவர்கள.
 இந்தியாவிலேயே 70 எம்எம் ஸ்லைடு போடுபவர்கள் என்று சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தாய் சேய் நல விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அறிஞர் அண்ணா தாமதமாக வந்தார் தனது தாமதற்கான காரணத்தை சொன்னார் .பெண்கள் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் காலம் தாழ்த்தி தான் இடைவெளி விட்டு அடுத்த குழந்தை பெற வேண்டும். அதனை நினைவு படுத்தவே நான் காலம் தாழ்த்தி தாமதமாக வந்தேன் என்றார் நகைச்சுவையாக.

*காமன் இருக்கிறானே அவன் நண்பன் போல் ஒரு எதிரி எமன் இருக்கிறானே அவன் எதிரி போல் ஒரு நண்பன்- ஆதிசங்கரர்

*இப்போதைக்கு காலத்தை கடக்கும் ஒரே வழி தூங்கி கழிப்பது தான் ..டைம் மெஷின் குறித்த கட்டுரையில்

*என் கணவர் தூக்கத்தில் எழுந்து ..
நடக்கிறாரா?
 இல்லை.. சைக்கிள் ஓட்டுறார் டாக்டர்

*இன்னைக்கு பக்தி பெருகிடுச்சு ,ஆனா மக்களிடம் ஒழுக்கம் குறைந்து போச்சு -கிருபானந்த வாரியார்

*உங்கள் மனைவியின் பெயரில் கதை எழுத என்ன காரணம் சார்? என் பெயரில் மற்றொருவர் எழுதிக் கொண்டிருப்பதால்- சுஜாதா

*கற்பு இதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனசாட்சியுடன் தனியாக இருக்கும்போது பாவம் செய்யாமல் இருப்பது _சுஜாதா

*விட்டலாச்சாரியா பற்றிய ஒரு பேட்டியில் அவரைப் பற்றி அறியாத ஒரு விஷயம் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார்

*இங்க வேலை ஒன்னும் இல்லப்பா போயிட்டு வா.. வேலையில்லாத போது எதுக்கு அநாவசியமா தொழிற்சாலையை திறந்து வைத்து இருக்கீங்க.. மூடி விடுவது தானே !! ஜோக்ஸ் பகுதியில்

*சிறையில் இருந்த அண்ணாவுடன் கே பி சுந்தரம் அவர்கள் தன் நினைவை பகிர்ந்து கொள்கிறார் அண்ணாவுக்கு ஓவியம் என்றால் மிகவும் விருப்பம் .அவரே ஓவியம் வரைந்து இருக்கிறார்

*ஒவ்வொரு முகத்திலும் சொல்லப்படாத 100 கதைகள். ஒரு முகம் என்பது வெறும் முகம் மட்டுமா அது துவங்கி வைக்கும் நினைவுகள் எத்தனை- செழியன்

*மிகவும் நாணயமான மனிதர் நாணயம் என்றால் அவருக்கு உயிர்- நகுலன்

*ஒரு இசை கச்சேரியில்..
 கொஞ்சம் கதவை மூடி தொலைங்க சார். உள்ளே பாகவதர் பாடுவது காதல் விழுந்து தொலைக்குது. ஜோக் பகுதியில்

விகடனின் இணை இதழ்களான மோட்டார் விகடன் அவழ்வியுடன் ஜூனியர் விகடன் தீபாவளி மலர் போன்ற பல்வேறு இதழ்களில் வந்த தொகுப்புகளை கட்டுரைகளாக ஆக்கி தந்துள்ளனர். இடையில் அட்டை படங்கள் கார்ட்டுன்கள் அந்த கால கிளாசிக் ஜோக்குகள் தலையங்கங்கள் பிரபலங்களின் கட்டுரைகள் வழக்குகள் சமூக பிரச்சனைகள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் உரையாடல்கள் என பல்வேறு விஷயங்களை ஒரு கால பொக்கிஷமாக இந்த புத்தகம் நமக்கு இருக்கிறது. எந்த பக்கங்களையும் நாம் எளிதில் கடக்க விடாதபடி சுவாரசியமாகவும் அதே நேரத்தில் பழமையை நினைத்து எண்ணிப் பார்க்கவும் இந்த புத்தகம் நமக்கு வழிவகை செய்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment