'ஒரு விசயத்தைப் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பார்க்கும் விசயமும் மாறுகிறது...' என்கிறது குவாண்ட இயற்பியல். எல்லைக்குட்பட்ட நம் அறிதல்களால், நம்மை சிறிதினும் சிறிதாக சுருக்கிக்கொள்ள உதவுகிற கதைகளையோ, செயல்களையோ நாம் நம்ப விழைகிறோம்.
'இந்த உட்சுருங்கலுக்கு காரணம் நானல்ல, இதுவே வாழ்வியல்போக்கு' என எதன்மீதோ பொறுப்புசுமத்தி நம்மை நாமே நியாயப்படுத்துகிறோம். மானுட அகம் எந்நிலையிலும் சுருங்கப்படுவதன் பொருட்டு படைப்படைந்தது அல்ல.
அறிதலால்... அமைதியால்... அடைதலால்... கணத்திற்குக் கணம் அது விரிவுகொள்வது. ஆகவே, நம் சின்னஞ்சிறு அகத்தை, பெரிதினும் பெரிய இப்பிரபஞ்சத்தோடு பொருந்த வைக்கக்கூடிய கதைகளும் செயல்களுமே நமக்குத் தேவை. அதைத் தேடி கண்டடைவதே ஒவ்வொரு மனிதரின் பிறப்புநோக்கம்.
-படித்தது
No comments:
Post a Comment