Tuesday, 4 July 2023

நீதிபதியாக இருந்த முல்லாவிடம் ஒருவன் ஓடி வந்தான்... அய்யா... எனக்கு சொந்தமான பசு மாடு உங்க வயலில் புகுந்து நாசம் ஆக்கிடுச்சு... என்றான்..முல்லா சொன்னார்.. இதற்கு பசு என்ன செய்யும்... அதுக்கு பகுத்தறிவு இல்லை..பசுவுக்கு சொந்தக்காரன் தான் தண்டிக்கப்பட வேண்டியவன்.. அபராதம் கட்ட வேண்டியவன் என்றார்.ஜட்ஜ் அய்யா..அவசரத்தில் மாத்தி சொல்லிட்டேன்..உங்க பசு, என் வயலை நாசம் ஆக்கிடுச்சு என்றான் அவன்..யோசித்த முல்லா சொன்னார்.. அந்த பீரோவில் நாலாவது அடுக்கில் , மூன்றாவதா ஒரு பெரிய ஊதாஃபைல் இருக்கே ,,அதையும் பக்கத்தில் இருக்கும் சட்ட புத்தகத்தையும் எடுங்க... கொஞ்சம் ஆராய வேண்டி இருக்கு

No comments:

Post a Comment