Monday, 3 July 2023

ராமன் விளைவு


ராமன் விளைவு என்ற ஆய்வுக்காக சி வி ராமனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை பெறுவதற்கான கடிதங்கள் அவருக்கு கிடைப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு பல முட்டுக்கட்டைகளை போட்டு பார்த்தது. கடைசியில் வேறு வழி இன்றி அவரை அனுமதித்தது. ஒரு நிபந்தனையுடன்..

ராமன் பரிசு பெறும் போது வேறு
எதை பற்றியும் பேசாமல் பரிசினை மட்டும் பெற்று வர வேண்டும். ஆனால் அந்த மேடையில் ராமன் அவர்கள் "இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடும் விடுதலை வீரர்களுக்கு இந்த பரிசை நான் அர்ப்பணிக்கிறேன் என்று தைரியமாக சொல்லிவிட்டு வந்தார்.

 அதனால் தான் ராமன் விளைவு ஆய்வு முடிவை வெளியிட்ட
தினமான பிப்ரவரி 28ஆம் தேதியில் அவரை பெருமைப்படுத்தும் விதத்தில் இந்தியா "தேசிய அறிவியல் தினமாக" அறிவித்துக் கொண்டாடி வருகிறது

No comments:

Post a Comment