மீள் பதிவு
பாடகராக எஸ்பிபி மாபெரும் லெஜன்ட். ஆனா ஓர் இசையமைப்பாளராகவும் எஸ்பிபி சாதித்திருப்பார். சிகரம் படத்தின் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு" பாடல் எனது எல்லா சோகங்களிலும், வாழ்வின் நம்பிக்கை இழக்கும் தருணங்களிலும் மிகப்பெரிய ஆருதலாக இருந்திருக்கிறது.
இவரே மிகச்சிறந்த பாடகர் என்றாலும், இநத பாடலை ஜேசுதாஸுக்கு அளித்திருப்பார். பாடல் வரிகள் - இசை - பாடகரின் குரல் என மூன்றும் ரொம்ப அரிதாகத் தான் ஓர்மைப் பட்டு உன்மத்த நிலை அடையும். அந்த வரிசை பாடலில் அகரம் இப்போ... நிச்சயம் முன் வரிசையில் இடம் பெறும்.
கேட்பதற்கு எளிமையான சந்தம் போல இருக்கும். ஆனா அதில் இருக்கும் சிரமத்தை ஜேசுதாஸ் ஒரு லைவ் கான்டெஸ்டில் கூறுவார். செமயா இருக்கும். (இணைப்பில் காணவும்). தனிப்பட்ட வகையில், நான் இந்தப் பாடலை எஸ்பிபி யே பாடியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவரது குரல் இந்த பாடலின் ஆன்மாவை இன்னும் உயரமாக, வேறு தளத்துக்கு கொண்டு சென்றிருக்கும்.
//பசியார பார்வை போதும்
பரிமாற வார்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை
நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்கை உள்ளது..//
-janakiram
No comments:
Post a Comment