மின்மினிப் பூச்சிகள் இப்போது கண்களில் தட்டுப்படுவதில்லையே....என்ன காரணம்?
ஃபயர் ஃபிளைஸ்( Fire flies) எனப்படும் மின்மினிப்பூச்சிகளை நாம் மழை, மற்றும் குளிர்காலங்களில் பார்க்க முடியாது.அப்போது அவை மண்ணுக்கு அடியில் போய் ஒட்டிக்கொண்டு மண்புழுக்களை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் .
வெயில் காலத்தில் மட்டுமே வெளியே வரும். அதுதான் அதன் இனப்பெருக்க காலம் கூட.
இந்த சமயத்தில்தான் மின்மினிப்பூச்சிகள் வெளிப்பட்டு நம் பார்வைக்கு கிடைக்கிறது.
இந்த பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு ஒளிர் செல்கள் இரவு நேரங்களில் செயல்பட ஆரம்பிக்கின்றன .
இவற்றில் உள்ள லூசிபெரின் ( Luciferin) என்கிற ஒரு ரசாயனப் பொருள் தான் அந்த பூச்சிகளின் ஒளி ஜாலத்துக்கு காரணமாக அமைகிறது .
பூச்சிகள் சுவாசிக்கும் போது அதன் உடலுக்குள் போகும் ஆக்ஸிஜன் உள்ளே இருக்கும் ரசாயனப் பொருளான லூசிபெரினோடு இணைகிறது.
பின் லூசிபெரேஸ் (Luciferase )என்கின்ற என்சைமோடு கலந்து ஆக்ஸிலூரி பெரிலின் என்கிற ஒளிரும் தன்மையாக மாறுகிறது.
இப்படி ஒரு பூச்சியினம் வெளிப்படுத்தும் ஒளியின் நிகழ்வுக்கு பயோலூமைன் சீன்ஸ் ( Bioluminescence) என்று பெயர் .
இதில் உள்ள இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெண் பூச்சி வெளியிடும் ஒளியின் அளவை காட்டிலும் ஆண் பூச்சி வெளியிடும் ஒளியின் அளவு அதிகம் என்பதுதான்.
ஒவ்வொரு பூச்சியும் 5 வினாடிகள் இடைவெளி விட்டு ஒளிர்வதால் வெளிச்சம் நமக்கு கண் சிமிட்டுவது போல் தெரியும்.
பத்தாயிரம் மின்மினிப்பூச்சிகள் ஒரே இடத்தில் இருந்தால் 40 வாட்ஸ் பல்பு எரியும் போது எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ அந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கும் என்பது ஹைலைட்.
No comments:
Post a Comment