நமது இளமையில் எல்லாவற்றிலும் கச்சிதத்தை எதிர்பார்க்கிறோம். அந்த மாயை மீது பித்து கொள்கிறோம். உறுதியைத் தொழுகிறோம். ஆனால், வயதாகும்தோறும் மனிதர்களின் இயல்பான பிழைகளை விரும்பத் தொடங்குவோம். கடும் இன்னல்களிலிருந்து மீண்ட கதைகள், கர்மாவைப் போல நம்மைப் பின்தொடர்ந்த போராட்ட வாழ்வு, சூழலுக்கேற்பத் தன்னை வடிவமைத்த ஆன்மாவின் பலகீனங்கள், வயதாவதன் நொய்மை போன்றவற்றை ஏற்கப் பழகுவோம். நம்முடைய ஆற்றலும் போராட்டக் குணமும் வலுவிழக்கும்போதே நமது உண்மையான இயல்பென்ன என்பதை உணர்கிறோம். அத்தகைய புரிதல் மலர்ந்ததும் இவ்வுலகில் வாழ்வதற்கு எஃகு போன்ற உறுதி தேவையில்லை, பூஞ்சையான மனங்களே போதும் என்கிற தெளிவைப் பெறுகிறோம். முன்னர் குறைகளை அடையாளம்கண்ட இடத்தில், தற்போது வாழ்வை முழுமையாக அனுபவித்து அறிந்ததற்கான தடயங்களைக் காணத் தலைப்படுகிறோம்.
- ஜெஃப் பிரவுன்.
No comments:
Post a Comment