கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதை வசனத்தை பலர் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். அனைவரும் பலனை எதிர்பார்த்து தான் செய்கின்றனர். ஒரு செயலை செய்ய துவங்கும் போது பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும் பலனை எதிர்பார்த்துதான் நாம் செயல்படுகிறோம்.
இந்த எதிர்பார்ப்பு நம்
நம் விருப்பு வெறுப்புகளை பூர்த்தி செய்து கொள்ள எண்ணுகிறோம். இந்த எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருப்பது தான். நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்சனை. பலனை மனதில் கொண்டு செயல்படு. அந்த பலனை அடைவதற்கு தகுந்த மாதிரி திட்டமிட்டு நன்கு செயல்படு. ஆனால் பலன் எதிர்பார்த்த மாதிரி
அமையவில்லை எனில் உணர்ச்சி வசப்படாதே. ஏற்றுக் கொள்வதில் கோபம், சலிப்பு, தளர்வு, எதிர்ப்பு உணர்வுகள் கொள்ளாதே .பலனை வைத்து உன் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்காதே
-இனிய காலை
No comments:
Post a Comment