நந்திவர்மன் பல்லவ மன்னன் இறந்து போனார் தன்னை ஆதரித்து வந்த வள்ளல் இறந்து போனதால் சோகம் கொண்ட கவிஞர் ஒருவர் இவ்வாறு கவிதை வடித்தார்
வானூரும் மதியை அடைந்ததும் தட்பம்
வரி கடல் புகுந்ததன் பெருமை கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்த உன் கரங்கள் தேனுறு மலரால் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததும் தேகம் யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தைய பரனே
நந்திக்கலம்பகத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.நந்தியே! அருளாளனே உன்னிடமிருந்த குளிர்ந்த குணம் நிலவிடம் போய்விட்டது. உன் பெருமையை கடலிடம் போய்விட்டது. உன் வீரம் புலியிடம் போய்விட்டது. உன் கைகள் கற்பக மரத்திடம் போய்விட்டன. இதுவரை உன்னிடம் இருந்த திருமகள் திருமால் இடம் போய்விட்டாள். உன் உடல் தீயிடம் போய்விட்டது. உன்னை நம்பி வாழ்ந்திருந்த நானும் என் வறுமையும் இனி எங்கே போவோம் என்கிறார் கவிஞர்
No comments:
Post a Comment