Wednesday, 3 April 2024

பலவீனமே போற்றதலுக்குரியது. மனிதன் பிறக்கின்ற போது பலவீனத்துடனும் , நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கிறான் . அவன் வளர்ந்து பெரியவனாகி முதுமையடைந்து மரணிக்கும் போது கடினமானவனாக ,உணர்வற்றவனாக மாறிவிடுகிறான். செடி மரமாக வளர்கின்ற போது மென்மையாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையுடனும் இருக்கும். அது வளர்ந்து பெரிய மரமாகி மரணிக்கும் போது வறண்டு கடினமானதாக மாறியிருக்கும். கடினமும் , வலிமையும் மரணத்தின் நண்பர்கள் . நெகிழ்வும், பலவீனமும் நம் இருத்தலின் புத்துணர்வை வெளிப்படுத்துபவை. எது வளைந்து கொடுக்காமல் கடினமாக இருக்கிறதோ அது வெற்றி அடைவதில்லை.- திரைப்பட மேதை தார்க்கோவ்ஸ்கியின் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment