கிஷ்கிந்தா காண்டம் விமர்சனம்
*மணி
நல்ல படங்கள் இரண்டு முறை ஹிட்டடிக்கின்றன.. தியேட்டரிலும் ஓடிடியிலும். படம் வந்தபோதே பாசிட்டிவ் ரிவ்யூக்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்.விமர்சனம் படித்துவிட்டு கடந்தாலும் நாமே நேரில் பார்க்கும் போது இன்னும் பரவசமடைந்து ரசிக்கலாம். மலையாள படங்களை பொறுத்தவரை பொறுமையை வரவழைத்துக் கொண்டு பார்க்கும் எண்ணம் வந்துவிடும். பத்து கோடியில் உருவான படம் எழுபது கோடி வசூலித்திருக்கும் இப்படம் எப்படி இருந்தது என பார்ப்போம்.
கதை
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான விஜயராகவனுக்கு இரு மகன்கள். மூத்தவர் பிரான்சிலும், இளையவரான ஹீரோ ஆசிப் அலி வனத் துறையிலும் பணிபுரிபவர். முதல் மனைவி நோயில் இறந்துவிட.. மகன் காணாமல் போய்விடுகிறார். தந்தையின் துப்பாக்கியும் காணாமல் போகிறது.
அபர்னா பாலமுரளியை இரண்டாம் திருமணம் செய்யும் போது இந்தவிவகாரங்கள் எல்லாம் வருகிறது. அமைதியான இரண்டாவது வாழ்வை துவங்கும் இவர்களின் வாழ்க்கையில் தந்தையின் துப்பாக்கி போன விசயம் பூதாகரமாகிறது.தொலைந்து போன தன் மகனை தேடும் முயற்சியில் அபர்ணவும் இணைய என்ன ஆனது என்பதை 2. மணி நேரத்துக்கு மேல் நம்மை கட்டிப்போடும் திரைக்கதை தான் இப்படம்.
கதை கேட்கும் போது இதெல்லாம் இரு கதையானு கேட்கத் தோன்றும். ஆனால் பால் சூடாவது போல் மெதுவாக துவங்க.. இறுதியில் பொங்க வைக்கும் பூம் திரைக்கதையே பிரதானம்.இறுதியில் இவ்வளவு தானானு தோனும் ஆனா யோசிச்சு பார்த்தா இரண்டு மணி நேரம் அடுத்தடுத்த திருப்பங்களை நினைத்து மனம் ஓகே சொல்லும்
#ப்ளஸ்
*மறதி நோயால் பாதிக்க்ப்பட்டும், எரிந்து விழும் சிடு மூஞ்சியாக வாழ்ந்திருக்கும் விஜயராகவன்
*முதலில் உருகுவது, தந்தைக்காக கரைவது, மகனை நினைத்து ஏங்குவது என ஆசிப் அலி பாஸ்மார்க்
*ஒளிப்பதிவு நம்மையும் அப்பகுதிக்கு அழைத்துப் போகிறது. கதை திரைக்கதையும் இவரே என்பதால் மேஜர் வொர்க் பாஹூல் ரமேஷ்க்கு.
*எவ்வளவு நல்லவன மாறினாலும் அவன் கெட்ட பெயர் அவனைவிட்டு போகுமா? எனும் வசனம் நச்
#மைனஸ்
*எவ்வளவு சஸ்பென்ஸ் ஏத்தினாலும் இறுதியில தெரிஞ்சிடும்.அந்த வகையில் இறுதியில் இவ்வளவுதானானு தோனிச்சு. ஆனா தந்தை மகன் பாசத்தை வச்சு மேனேஜ் செய்திட்டாங்க
*அடிக்கடி பேப்பர்களை எரிக்கிறவர் அத்தனை நாள் கழிச்சு அபர்னா பார்க்கும் போதா முக்கிய தடயத்தை எரிப்பார்.
*மனைவி இறந்ததது ஓகே. பையன் காணாமல் போனதை மனைவியின் உறவினர்க்கு சந்தேகம் வராமல போய்டும்
ஆனாலும்திரைக்கதை ஓட்டத்தில் இக்குறைகள் எல்லாம் மறந்துவிடும். படத்தின் இறுதியில் பாசத்தை காட்டினாலும் அந்த சஸ்பென்ஸ்க்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment