ஆங்கில ரிடையர்மெண்ட் குழுவில் ஒருத்தர் எழுதி இருந்தார்
அவருக்கு ஓய்வுபெறும் வயது. ஒரு Caravan வாங்கிட்டு நாடு முழுக்க சுற்றவேண்டும் என ஆசை. பென்ஷனே கடைசியா வாங்கும் சம்பளத்தை விட 107% கூடுதலா வரும்.
ஓய்வு பெறும் நாளன்று மேனேஜர் அழைத்தார்.
"உன் வேலைக்கு இன்னொரு ஆளை எடுப்பதை விட காண்டிராக்டுக்கு விடலாம் என இருக்கோம். உனக்கு கொடுத்த அதே சம்பளம். ஆனால் பென்சன் மாதிரி பெனிபிட்ஸ் எல்லாம் இருக்காது என்பதால் அதில் எங்களுக்கு காசு மிச்சம். வேன்டுமென்றால் நீ ஓய்வு பெறுவிட்டு அடுத்த நாளே சேர்ந்துக்கலாம். உனக்கு பென்சனும் வரும், பழைய சம்பளமும் வரும்"
200% சம்பள உயர்வு. மனிதருக்கு தலைகால் புரியவில்லை.
மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறும் திட்டத்தை மூட்டைகட்டிவிட்டு வேலைக்கு சேர்ந்தார்
10 ஆண்டுகள் கடந்தன. இப்போது வேலை செய்யவே முடியவில்லை. ஓய்வு பெற்றே ஆகவேண்டும். ஆனால் காராவான் பயணம் போகமுடியவில்லை. கண்பார்வை மங்கிவிட்டது..."
"வயிற்றுக்காக ஆன்மாவை விற்றது தவறு என உணர்கிறேன்" என எழுதினார்
நமக்கு இருப்பது ஒரு லைஃப்
அதை முதலாளிக்கு உழைத்து கிடைப்பது என்ன?
அல்லது நீங்கள் முதலாளியாகவே இருந்தாலும் உங்கள் உழைப்பு உங்கள் வாடிக்கையாளருக்கானது. அதில் என்ன பலன்?
Age is a number என்பது மாதிரி ஒரு எல்லைக்கு மேல் பணமும் ஒரு நம்பர்தான்.
போதுமான அளவு சேர்ந்தபின் அதை அனுபவிக்க உடலில் தெம்பு இருக்கணும். சும்மா சேர்த்து வெச்சு பீரோவில் பூட்டி வெச்சு பலன் இல்லை
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment