Tuesday, 3 December 2024

Nassim Nicholas Taleb ( புகழ்பெற்ற Black swan நூலின் ஆசிரியர்) எழுதிய Fooled by Randomness என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Black Swan க்கு முன்பே அவர் எழுதிய நூல் இது.தற்செயலாக நடக்கும் ( Random events) நிகழ்வுகளுக்கு இதுதான் காரணம் என காரணம் கற்பிப்பது ( Determinism) மனித இனத்தின் சிந்தனைப் பிழைகளில் ( Cognitive errors) முதன்மையானது.இந்த நிற உடை அணிந்ததால்தான் நல்லது நடந்தது என்பது போன்ற மூட நம்பிக்கைகளில் தொடங்கி பல்வேறு வரலாற்று, சமூக, பொருளாதார நிகழ்வுகளுக்கும் இதுதான் காரணம் எனப் பலவற்றைத் தவறாகக் கற்பிக்கிறோம் என்பதை விளக்கும் நூல்.சட்டென்று எனக்குத் தோன்றியது- இந்த பிரபஞ்சம் உருவானது அதில் உலகம் உருவானது மனித உயிர் தோன்றியது- இவை எல்லாமே தற்செயல் நிகழ்வுகள்தான் ( Random events) . ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இதுபோல் பல Random events நடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பின்னால் எதோ காரணமோ, நோக்கமோ, சக்தியோ இருக்கிறது என்று நம்புவதுதான் மனிதனின் தலையாய மூட நம்பிக்கைகளில் ஒன்று. அறிவியல் படி இயற்கையாக ஒரு கரப்பான் பூச்சிக்கும் மனிதனுக்கும் பிறப்பின் நோக்கம் என்று எதுவும் கிடையாது. வாழ்ந்து மடிவது தற்செயல் நிகழ்வே. நோக்கங்கள் எல்லாமே நாமாகக் கற்பித்துக் கொண்டதேஇந்த எண்ணம் மிகப்பெரும் விடுதலையைத் தரவல்லது. மிகப்பெரும் வெறுமையையும்.டாக்டர் ஜி ராமானுஜம்

No comments:

Post a Comment