பீட்டர் கொள்கை (Peter principle) என ஒரு கொள்கை நிர்வாகவியலில் உண்டுஒருவர் ஒரு பள்ளியில் நல்ல ஆசிரியராக இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். விருது எல்லாம் வாங்குகிறார். பல வருடம் பணி செய்து சீனியாரிட்டி வந்துவிடுகிறதுபுரமோஷன் கொடுத்தெ ஆகவேண்டும். துணை ப்ரின்சிபாலாக நியமிப்பார்கள். அதற்கும் ஆசிரியர் பணிக்கும் சம்பந்தமே இல்லை. இது திடீர் என தொழிலையே மாற்றுவது மாதிரிதான். அதில் அவரால் பழைய திறமையை காட்ட முடியவில்லைஇப்போது ப்ரின்சிபால் வேலை காலி ஆகிறது. அதற்கு இவரை போடமாட்டர்கள். வெளியே இருந்து இன்னொருவரை எடுத்துவிடுவார்கள். இவர் அதற்கு வருத்தபட்டாலும், எதுவும் செய்ய முடியாது, துணை ப்ரின்சிபால் வேலையில் ஆசிரியருக்கு கொடுப்பதை விட சம்பளம் அதிகம். கவுரவம் கூடுதல். ஆனால் ஆசிரியர் பணியில் இருந்த மனமகிழ்ச்சி இல்லை.பள்ளியும் நல்ல சிறப்பான ஆசிரியர் ஒருவரை இழந்து, மொக்கையான ஒரு துணை ப்ரின்சிபாலை அடைந்தது.அதனால் இவர் இனி தன் மீதமிருக்கும் பணிநாள் முழுக்க துணை ப்ரின்சிபாலாக காலத்தை ஓட்டவேண்டியதுதான். பள்ளியும் இவரை துரத்த முடியாமல் "எப்ப ஓய்வு பெறுவார்?" என எதிர்பார்த்துக்கொன்டிருப்பார்கள் என்கிறது பீட்டர் கோட்பாடு~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment