பெரும் ஆளுமைகளிடம் நாம் வியக்கத்தக்க ஒரு பண்பு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையோ அந்தரங்கக் கவலைகளோ அவர்களது செயலூக்கத்தைப் பாதித்திருக்காது. குடும்பத் தகராறு இருந்திருக்கும், மணமுறிவு ஏற்பட்டிருக்கும், புத்திர சோகம் வாட்டியிருக்கும், காது கேளாமல் போயிருக்கும். கடும் உடற்சிக்கல், தீராத மனநோய்கூட இருந்திருக்கும். எதுவும் தங்களது வேலையை, தொழிலை அல்லது படைப்பாற்றலைக் குலைக்காத வகையில் கவனத்துடன் செயல்பட்டிருப்பார்கள். துக்கத்தை அண்டவிடாமல் ஒருமுகப்பட்டு செயலில் ஆழ்ந்திருப்பார்கள். சில சமயங்களில் அத்தகைய காலமே அவர்களது சிறந்த productive years-ஆக அமைவதும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை குடும்பம், குழந்தைகள், பெண்கள் எல்லாமே லட்சியப் பயணத்தில் அவ்வப்போது இளைப்பாறுகிற pit stops மட்டுமே. அவை தங்களது அறிவுநாட்டத்துக்கு, தேடலுக்கு, சமூக/கலைப் பங்களிப்புக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விலகலுடனும் அலட்சியத்துடனும் வாழ்வார்கள். அவர்களே மகத்தான முன்மாதிரிகள் ஆகிறார்கள். அவர்களையே நாம் ஆல்பா என்கிறோம்.-கோகுல்பிரசாத்உதாரணம் இளையராஜா, கார்ல்மார்க்ஸ் போல
No comments:
Post a Comment