Sunday, 12 January 2025

புத்தகம் 4

Reading_Marathon2025
#25RM055

Book No:4/100+
Pages:-120

மூளை மனம் மனிதன்
-,டாக்டர்ஜி.ராமானுஜம்

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம் டாக்டர் ராமானுஜம் அவர்கள் எப்போதும் மருத்துவரைப் போல தெரியாத பல விஷயங்களை சொல்வதோடு அவரே பாமரத்தனமாகவும் கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் அந்த கட்டுரையிலேயே சொல்லி விடுவது சிறப்பான விஷயம். "மனம் ஒரு கொடி போன்றது, அது தனித்தே இல்லாது எப்பொழுதும் எதையோ ஒன்றை பற்றி கொண்டே இருக்கிறது என்பதைத்தான் இந்த புத்தகம் படித்த உடன் அறிய முடிந்தது.

கேள்விகளுக்கான விடையை மத குருமார்களிடமும் தத்துவ அறிஞர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டபோது வந்து அறிவை விட, மனிதன் தானே முயன்று தேடி கண்ட போது அறிந்த பதில்களை  தான் அவனை அறிவை விரிவடையச் செய்தது.பிற உயிரினங்களைப் போல் இல்லாமல் உலகம் தோன்றிய நாளில் சூழலுக்கு தக்கவாறு மனித இனம் தனக்கு ஏற்றவாறு உலகை மாற்றிப் பார்க்கிறான் அதன் மூலம் பரிணாம வளர்ச்சியில் அறிவை விரிவு செய்து தான் நினைத்தவற்றை சாதிக்கிறான்.

சிந்தனை பற்றி சொல்லும்போது ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தால் குறைக்கிறது. ஆனால் யாருமே இல்லை என்றால் அது ஒரு வேறு நாயை பற்றி யோசித்து கொண்டு இருக்காது. ஏனெனில் அதற்கு சிந்தனை இல்லை. ஆனால் மனிதர் இருவர் கூடி பேசும்போது இல்லாத மூன்றாவதவர் பற்றி பேசுகிறார். தனியாக இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறான். இவ்வாறு எண்ணங்களும் மொழிகளும் சிந்தனையும் வளர்ந்ததன் வரலாற்றினை உளவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறார்.

பல திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.. மூளையை கேட்டு வேலை செய்ய மாட்டேன் மனசாட்சியை கேட்டு வேலை செய்கிறேன். மனசாட்சி இருக்கா மனதின் குரல் கேட்கவில்லையா என்று பலமுறை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் மருத்துவர் மூளை செய்யும் வேலைக்கு இதயம் பேர் வாங்கிக் கொள்வதாக கூறி, மனதின் குறியீடாக இதயம் இயங்குகிறது. ஆனால் அதிலிருந்து லேப்டாப் சத்தம் மட்டும்தான் கேட்கிறது என்பதை நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கும் விதத்திலும் சொல்லி இருக்கிறார்.

நந்தலாலா படம் வந்த புதிலில் மிஸ்கின் அவர்கள் பகிர்ந்த செய்தி.. சாதாரண மனிதர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணங்கள் வருகிறது. ஆனால் அதில் ஒரு இணைப்பு தன்மை இருக்கிறது. அந்த எண்ணங்களிலிருந்து நினைத்தவுடன் வெளியேற முடிகிறது. ஆனால் மனப்பிறழ்வு இருக்கும் மனிதர்களிடம் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் தொடர்பற்று வெளியே வர முடியாமையாலும், அவர்கள் மனபிறழ்ச்சியாகவும் மன நோயாளிகளாகவும் மாறுவதாக சொல்லி இருப்பார்.இதிலும் மனிதனின் எண்ணங்கள் தோன்றிய சிந்தனைப் புரட்சியில் ஆரம்பித்து எண்ணங்கள் எவ்வாறெல்லாம் மனிதர்களிடம் வளர்ச்சி பெற்றது என்பதனை பற்றிய வரலாற்று பூர்வமாக தகவல்களை கொடுத்திருக்கிறார்.

உளவியலில் சூழல் முக்கிய பங்காற்றுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் சூழல்தான், மனிதனுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதனை வாத்து கதை மூலம் நமக்குச் சொல்கிறார். வாத்துக்களை ஆராய்ச்சி செய்த கோன்ராட் லோரான்ஸ் வாத்துக்கள் பிறந்த சில மணி துளிகளில் அதன்முன் யார் அசைகிறார்களோ அவர்களையே தன் அம்மாவாக கருதி பின்னால் வருவதாக சொல்கிறார். இதனை மனிதனுடைய மூளையோடும்  மொழி அறிவோடும் தொடர்பு படுத்தி ஒரு சித்திரமாக நமக்கு கொடுத்திருக்கிறார்.

மூளையில் மொழி எங்கு உருவாகிறது எப்படி உருவாகிறது என்பதை சொல்லும் பகுதியில் மொழியால் தொடர்பு கொள்வது வெர்னிக், ப்ரோக்கா ஆகிய இரண்டு பகுதியில் வெர்னிக் பகுதி உள்வாங்கி புரிந்து கொள்வதற்கும் ப்ரோக்கா பகுதி வெளிப்படுத்துவதற்கும் செயல்படுவதாக சொல்கிறார். எண்ணங்கள் உணர்ச்சிகள் நினைவுகள் தவிர மூளையின் பகுதியில் உருவாகுபவை எவை எப்படி என்பதை குறித்து விரிவாக அலசி உள்ளார்.

மேலும் நினைவு, கவனம், மறதி எல்லாம் மூளையின் பகுதியில் எவ்வாறு உருமாற்றம் அடைகின்றன, வளர்கின்றன என்பது குறித்து எல்லாம் சொல்லிவிட்டு கலைப்படைப்புகளின் செயல்பாடுகளில் மனிதன் ஈடுபடும்போது மூளையின் பங்கு என்பன குறித்து எல்லாம் பேசியிருக்கிறார். மூளை குறித்து பல்வேறு புத்தகங்கள் வந்துள்ளன. மூளையின் உள்ள பாகங்கள் மூளையின் செயல்பாடுகள் என்பன குறித்து எல்லாம் வந்துள்ளன. ஆனால் இந்த புத்தகம் அதிலிருந்து வேறுபட்டதாக மூளையில் நடைபெறும் மாற்றங்களால் மனிதன் எவ்வகையில் மாற்றம் அடைகிறான். இந்த வரலாறு படிப்படியாக எவ்வாறெல்லாம் மனித மூளையில் வளர்ந்து வந்துள்ளது என்பது குறித்து எல்லாம் ஒரு ஆய்வு நூலுக்கே உரிய அம்சங்களுடன் பேசுகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment