உலகின் தப்பு-சரி எல்லாமே அதன் விளைவுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நேசித்தலும் நேசிக்கப்படுதலுமே உலகின் அழகான விஷயங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நேசத்தை எதிர்ப்பார்த்து நேசத்தை "காட்டுவது" நம்மையறியாமலே நிறைய பாசாங்குகளுக்கும் பாவனைகளுக்கும் கொண்டு சென்றுவிடும்.
"அதனால் என்ன பிழை நேர்ந்துவிடும்? கொஞ்சம் dramatic ஆக இருந்தால்தான் என்னவாம்?" Drama என்பதே பொய்யல்லவா? வேஷம், பார்ப்பவர்களுக்கு அலுப்பதில்லை. ஆனால் வேஷம் கட்டுகிறவர்களுக்கு அலுத்துவிடும். ஏனெனில் வேஷம் போடுகிறவர்களுக்கு ஆரவாரம் தேவை. அது குறைகிற போது நடிப்பு கூடி கூடி அதற்கு மேல் முடியாது என்கிற நிலை வரும். அப்போது புது audience, தேவைப்படத் தொடங்கும். Performance அலுக்கும்போது பார்ப்பவர்க்கும் வேறு மேடை வேறு நாடகம் தேடத் தோன்றும்.
அதைவிடக் கொடுமை நாம் பொய்யாக இருக்கிறபோது மற்றவரையுமே நம்பத் தோன்றாது. அடுத்துள்ள மனிதர் எவரையுமே நம்ப இயலாத தன்மை நமக்குள் வேறூன்றிவிடும். உலகின் எல்லா உணர்வுகளுமே மிகைப்படுத்தப்பட்ட நாடகமாகவே தோன்றும்.
ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளில்" ஒரு வரி வரும், "காதல் இருக்குன்னு சொன்னா இருக்கு.. இல்லன்னுட்டா இல்லை. அவ்வளவுதானே?!" இந்த வரி எனக்குள் பலமுறை ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. இனியும் இருக்கும். ஏனெனில் "காதலாகவே" நாம் இருக்கும் பட்சத்தில் அது இருக்கிறது-இல்லை என்று அறிவிப்பதற்கு எந்த அவசியமும் இல்லை.
No comments:
Post a Comment