ஆப்பிரிக்க குட்டிக்கதைஒரு விவசாயி தன் விளைநிலத்தில் பயிரிட்டிருந்த மாங்காய்களை திருடமுயன்ற ஊர் சிறுவர்களை பிடித்து அடிப்பார், கண்டபடி திட்டுவார். அவரைக் கண்டாலே ஊர் சிறுவர்களுக்கு எல்லாம் டெர்ரர்.ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். ஊர் சிறுவர்கள் எல்லாம் அதை திருவிழாவாக கொண்டாடினார்கள். தோப்பில் இஷ்டத்துக்கு மாங்காய் பறித்தார்கள். பராமரிக்க ஆள் இல்லாமல் தோப்பு அழிந்தது.அடுத்த வருடம் ஊரில் யாருக்கும் மாங்காய் இல்லை. அதிக விலை கொடுத்து சந்தையில் மாங்காய் வாங்க வேண்டி இருந்தது. சிறுவர்கள் அப்போதுதான் விவசாயியின் அருமையை உணர்ந்தார்கள்.சில வேலைகளை செய்பவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகியே தீரவேண்டும். அவர்களின் முக்கியத்துவம் அந்த வேலைகளை செய்ய ஆள் இல்லாமல் போகையில் தான் தெரியும்
No comments:
Post a Comment