30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-10
பக்கங்கள் -224
நாள்-5
சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன
-வழக்கறிஞர் த. ராமலிங்கம்
10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்கு புத்தகத் திருவிழாவில் பட்டிமன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அப்போது நடுவராக பங்கேற்றவர்தான் திரு ராமலிங்கம் அவர்கள். பட்டிமன்ற பேச்சின் ஊடே இலக்கிய நயம் அதிகம் பயன்படுத்தி காண்போர் அனைவரையும் கட்டிப்போட்ட அவரின் பேச்சினை தொடர்ந்து அவருடைய புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். கண்ணதாசன் குறித்து அவர் எழுதிய புத்தகம் மற்றும் இலக்கிய புத்தகங்கள் அனைத்திலும் சேர்ந்த வாசிப்பாளரின் உணர்வு வந்த புத்தகத்தில் பரிமளிக்கும். இந்த புத்தகம் நமது நம்பிக்கை இதழில் தொடராக வந்த மனித சிந்தனைகள் குறித்த 30 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.
மனித மனங்கள் எப்போதும் பலம் மற்றும் பலவீனங்களால் நிரம்பியது தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும் முடியும் தட்டிக் கொடுத்து அதனை அலைக்கழிக்கவும் முடியும். ஆக நல்ல சொற்கள் விதைகள் போல் மனதில் விழுந்தால் தான் நல்ல எண்ணங்கள் வளரும். தன்னம்பிக்கையுள்ள மனிதர்கள் நன்கு வாழ்வார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அதீத தன்னம்பிக்கை இருப்பது over confident இந்த காலத்தில் மாறி விடுகிறது. அதீத நம்பிக்கை சில சமயம் அலட்சியமாகவும் மாறிவிடுகிறது. அளவோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் அமுதமும் கூட விஷம் தான் என்றும் பழமொழி நினைவுக்கு வருகிறது. அதனை குறித்த திருக்குறளையும் கூறி புத்தரின் வரிகள் இதற்கு பொருத்தமாகச் சொல்லி இருப்பார்
Anything in excess is poison.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எப்போதும் மேலோங்கி இருந்தால் நட்பு நிலைப்பதில்லை. திரைப்படங்களில் காட்டப்படும் மிகப்பெரிய மரங்கள் சிறு காற்றுக்கும் சாய்ந்து விழுவதைப் போல அவை விழுந்து நொறுங்குகின்றன. காட்சிப் பொருளாக மட்டுமே உருவாகும் அவை அதனால் தான் காற்றின் வேகத்துக்கு கூட நிற்பதில்லை என்ற எளிய உண்மையை ஆழமான கருத்துக்களில் விவரிக்கிறாரீ. எந்த உருவமும் அப்படித்தான் மனதில் உண்மையும் பழகுபவர் மீது அக்கறையும் இருந்தால் மட்டுமே உறவுகள் ஓங்கி நிலைக்கின்றன என்கிறார்.
சுய ஆய்வு என்பது நம்மை நாமே ஆய்வு செய்து கொள்வது கள ஆய்வு என்பது நமது சூழலை சுற்றி இருப்பவரை ஆய்வு செய்வது இவை இரண்டும் சரியாக இருப்பது மிகவும் அவசியம். எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை செய்ய வேண்டி உள்ளது. அப்படி செய்தால்தான் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பாக அமைகிறது. உறங்கி எழுந்தவுடன் உறங்கச் சொல்லும் முன்பும் செய்து கொள்ளும் இந்த சிந்தனைகளை சரியாகவே நம்மை நாமே செய்து கொள்ளும் முடிவு இதற்கு உரிய குறளாக
"சொல்ல பயன்படுவது சான்றோர் ;கரும்பு போல் கொல்ல பயன்படும் கீழ் என்னும் குறளை மேற்கோள் சொல்கிறார்.
சாறு எடுப்பது என்பது சாதாரண வேலை அன்று. கீழ் மக்கள் என்று சொல்வதற்கு காரணம் கரும்பிலிருந்து சாறு எடுப்பது போல் எடுத்தால் தான் அவர்களிடம் நல்லது நடக்கும் இல்லை எனில் நடக்காது .நீ சொல்ல பயன்படுபவனா அல்லது பிழிந்து எடுத்தால் மட்டும் பயன்படும் கரும்பு போன்றவனா? உன்னை நீயே ஆய்வு செய்து கொள் என்று வள்ளுவன் சொல்வதாக சொல்கிறார். சுற்றி இருப்பவர்களில் இந்த இரண்டு விதமான மனிதர்களுடன் தான் நாம் காலம் தள்ளுகிறோம்.
நாளெல்லாம் வினை செய் என்கிறார் பாரதி தனது புதிய ஆத்திச்சூடி அப்படியானால் எப்போதும் இலக்கை நோக்கி முயன்று கொண்டே இரு அதுதான் முன்னேற்றத்திற்கான வழி பொருள் .நேரத்தை எல்லாம் வீணடிக்காமல் தூக்கமும் ஓய்வும் வீணாகும் நேரம் தான் எடுத்துக் கொள்ளப்படும். இலக்கை நோக்கி தொடர் முயற்சிகள் நமது நேற்றைய நாளை விட இன்றைய நாளை உயர்ந்ததாகவும் சிறந்ததாகும் ஆக்க வேண்டும் என்கிறார். உயிரே போவது என்பது எளிதல்ல ஒவ்வொரு நொடியும் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்க வேண்டும்.
நிறைய தன்னம்பிக்கை கருத்துக்கள் திருக்குறள் சங்க இலக்கியங்கள் வாழ்வியல் மேற்கோள்கள் என அனைத்தும் இந்த சிறு நூலை சுவாரஸ்யமான நூலாக வாசிக்க வைக்கிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment