#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-30
பக்கங்கள் -464
நாள்-20
கடல் பழகுதல்
-வறீதையா கான்ஸ்தந்தின்
கடல் என்பது சங்ககாலம் முதற்கொண்டு வாணிபம் செய்ய பயன்படுத்தினர்.எல்லைகளாக இருந்தது என துவக்க காலத்தில் கடல் என்பது சங்க காலம் முதல் எவ்வாறு மனிதர்களுடன் கலந்து இருந்தது என்பது மட்டும் இல்லாமல்..கடல் குறுத்த அறியாத செய்திகள் இருக்கின்றன. சூழகியல் கேடு நிலம் மட்டுமில்லாமல் நீரினையும் எவ்வாறு மாசுபடுத்தி உள்ளது என தெரிவிக்க கி.பி.2050இல் கடலில் மின்களைவிட நெகிழிகளே அதிகமாய்க் கிடைக்கும்’ என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
இப்போதும்.கடலின் அருகில்.சென்றால் குழந்தையாய் மாற்றிவிடுகின்றன. கடலை பார்ப்பதோடு மட்டுமின்றி, ஒரு கடல் பயணியாக, மாலுமியாக, தொல்லியல், பருவநிலை ஆய்வாளராகக் கடலைப் பார்ப்பவர்களுக்குக் கடல் அற்புதமான அனுபவங்களைத் தருகிறது. கடலுக்குள் நடைபெறும் மாற்றங்கள், கடலின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை, உள்ளே நடைபெறும் நீரோட்டங்கள் என விவரிக்கிறது.
கடல் மேற்போக்காய் பார்க்கும் போது.. வளமை. ஆனால் கடலில் மாசுபாடு எவ்வாறு நடைபெறுகிறது.'இயற்கை மனிதனின் தேவைக்குப் போதுமானவற்றைக் கொண்டுள்ளது. பேராசைக்கு ஈடுகொடுக்குமளவுக்கு அல்ல' எனும் வரி சிந்திக்க வைக்கிறது.கழிமுகம் என்பது கடலும் ஆறும் இணைக்கும் இடம். இதில் கழிவுகள் அதிகம் கலப்பதாக சொல்கிறது.
கடலுடன் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம், இயற்கை எவ்வாறு அவர்களை பாதிக்கிறது என்பதை நுணுக்கமாகப் பதிவு செய்கிறது.மேலோட்டமான கட்டுரையாக இல்லாமல் ஆய்வு நோக்கில் அணுகுகிறது.கடல் வாழ்க்கையின் சிக்கல்களை, உண்மைகளை போதிய அளவில் அக்கரையோடு பதிவு செய்கிறார்.
மீன் உண்ணும் சமவெளி மக்களிடையே மீன்களைப் பொதுப் பெயரால் அழைக்கும் வழக்கம் வந்துவிட்டது. சொறா, எறா, நெத்திலி, பாரை, சீலா, வஞ்சிரம் என மீன் பெயர்கள் ஐந்தாறாகச் சுருங்கிவிட்டன. கடியப்பட்டினம் கிராமத்தில் ஒரு மீனவர் ஒரே மூச்சில் 313 மீன்களின் பெயரை அடுக்கிக்கொண்டே போனார் என்பது வியப்பாய் உள்ளது.கடல் மீன்கள் குறித்து விரிவாக சொல்கிறது.மீன் பிடி தொழில் நுட்பம் பற்றி பேசுகிறது. உதாரணத்துக்கு நெத்திலி மீன் எவ்வாறு பிடிக்கப்பட்டு பதப்படுத்தபடுகிறது என்பதை பற்றி சொல்கிறது.
பழங்குடி மக்களின் தனிப்பெரும் அடையாளமாய் நிற்பது இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை.இவ்வாறுதான் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எவ்வாறெல்லாம் உள்ளது என அறிய முடிகிறது.
உண்மையில் மீனவர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்களுடைய போராட்டங்கள் நியாயமானவையா? கடலில் அவர்களுடைய சிக்கல்தான் என்ன? கடற்கரைகளில் அவர்களின் வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது? இப்பிரச்சினைகள் ஊடகங்களில் சரியாக அணுகப் படவில்லை. மீனவர்களின் கண்ணோட்டத்தில் அலசப்படவில்லை என பேசுகிறது.
கனிம மணல்கொள்ளை, சேதுக் கால்வாய்த் திட்டம், கச்சத்தீவு, எரியும் கடல், பதறும் கரை என்பது குறித்தும்.. சுனாமியினால் உண்டான பிரச்சனை அதற்கு பின் நிகழ்ந்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம்,பிரச்சனை குறித்தும் பேசுகிறது.
பேசப்படாமலும் உற்றுக் கவனிக்கப் படாமலும் நூறுவகைத் துயரங்கள் கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடக்கின்றன.கடலுக்குள் போவதும் யுத்தத்துக்குப் போவதும் ஏறத்தாழ ஒன்றுதான். இரண்டிலும் தகவல் தொடர்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உயிர்நாடியானவை என்பது ரசிக்க வைத்தது
#ரசித்தது
*பிரம்மாண்டம் கடலின் குறியீடு. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கடலைப் பரவை என்கின்றன. பரவை என்றால் பரந்துபட்ட என்று பொருள்.
*நிலம் அசலம்; நீர் சலம். அது சலம்பிக்கொண்டே இருக்கும்.
*கடல், பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்புநீர். கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. பூமியின் 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 x 106 கன மீட்டர்கள் (3740 கோடி கோடி கனமீட்டர்கள்). நிலத்தைப் பொறுத்தவரை அதன் பரப்பில் மட்டும்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். அவ்வாறு உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாகத் திகழ்கிறது கடல்.
*ஆப்பிரிக்காவின் தென்முனையில் வாஸ்கோ டி காமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தது கி.பி.1498 ஏப்ரலில். அஹமது பின் மஜித் என்னும் அரேபிய மாலுமிதான் வாஸ்கோ டி காமாவுக்கு வழிகாட்டினார்.
*பருவம் தோறும் மீன் கூட்டங்கள் கரைக்கு வருவதன் முன்னறிவிப்பாக ‘தேத்து’ என்னும் கடல் நிற மாற்றம் வருகிறது.
*வனப் பழங்குடிகள் போல கடலோர மக்களும் வேடுவர்களே. அவர்கள் கடல் பழங்குடிகள்.
கடல் குறித்து அறிந்து கொள்ள ஆவல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாய் இருக்கிற்து. நூலின் இடையே வரும் சங்கப்பாடல்கள், மீனவ வாழ்க்கை முறையும் நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment