Monday, 14 April 2025

புத்த்கம்-31



#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-31
பக்கங்கள் -667
நாள்-21

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை
-,மைக்கேல் ஹெச்.ஹார்ட்

அறிவியல் அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் மதத்தை தோற்றுவித்தவர்கள் என 100 ஆளுமைகளை பற்றி இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது. கால வரிசைப்படி இந்த கணக்குகள் ஒவ்வொன்றும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பும் படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதால் நமக்கு எளிமையாக புரிகிறது. தினசரி 10 அறிஞர்கள் வீதம் வைத்துக்கொண்டு பத்து நாட்களுக்குள் இந்த புத்தகத்தை படிக்க முடிந்தது. வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்திய 100 பேர் அவர்களின் தத்துவத்தின் அடிப்படையில் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு என்பதை நிகழ்காலத்தை வைத்து மட்டும் சிந்திக்காமல்.. அவர்களுடைய சாதனைகள் எதிர்கால தலைமுறை மீதும் நிகழ்ச்சிகள் மீதும் ஏற்படுத்தக்கூடிய விளைவினை கவனத்தில் கொண்டு இந்த அறிஞர்களை நாம் பார்க்க முடிகிறது. அரபு மொழியை சிதையாமல் இருப்பதற்கான காரணம் குர்ஆன் அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் வட்டார மொழிகளாக சிதறி சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம் என முகமது நபியை பற்றி சொல்லும்போது சொல்கிறது.

நியூட்டன் தனது கண்டுபிடிப்பதற்கான அறிவியல் உண்மைகளை வெளியிடுவதில் எப்போதும் தயக்கம் காட்டினார். அவருடைய முதல் கோட்பாடு ஒளியின் இயல்பு பற்றிய புரட்சி நூலே ஆகும். அதுவே பல ஆண்டுகள் பின்னர் வெளியிடப்பட்டது என்ற தகவலை தாங்கி வருகிறது. இயேசு பெருமான் இறந்த பிறகு தொடக்க கால கிறிஸ்தவர்கள் சமய எதிரிகளாக கருதப்பட்டதால் அடக்குமுறைக்கு ஆளாயினர். புனித பவுல் அவர்களும் அடக்குமுறைக்கு ஆளான விஷயம் தெரிய வருகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள 27 பகுதிகளில் 14 பவுல் எழுதியதாக கருதப்படுகிறது. புதிய ஏற்பாட்டை எழுதுவதில் முக்கிய பங்கு ஆற்றினார்.

இன்று நாம் பயன்படுத்தும் காகிதத்தை கண்டுபிடித்தவர்களில் சாய் லுன் முக்கியமான இடத்தை வகிக்கிறார். வரலாற்று பாடநூல்கள் கூட இவருடைய பெயர் காணப்படவில்லை எனினும் கவனமான ஆராய்ச்சியின் மூலம் இவர் பெயர் கண்டறிய முடிகிறது. இவருக்குப் பின் அச்சுக்கலையை கண்டறிந்த முன்னோடியான கூட்டன் பார்க் அச்சு இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை புதுமையில் நவீன எழுத்துரு அச்சு இயந்திரம் காகிதத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கான உலகின் வளர்ச்சியை எடுத்துச் சென்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

கொலம்பஸ் குறித்த நேர்மறையான பக்கங்களை இந்த புத்தகம் பேசுகிறது .ஆனால் அவர் ஒரு பேராசைக்காரராக இருந்தார் என்பது அவருடைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. இசபெல்லா வாக்குறுதி கொடுத்ததை மறந்து திறமை அற்றவராக இருந்ததால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட இறுதி நாட்கள் வறுமையில் வாடி மாண்டதாக சிலர் கூறுவர். ஆனால் காலமாகும் போது ஓரளவு செல்வ செழிப்புடன் இருந்தார் எனவும் கூறுவர்.

ஐன்ஸ்டீன் கொள்கைகள் நியூட்டன் கொள்கையை விட அடிப்படையில் மிக துல்லியமானது. இருப்பினும் இந்த பட்டியலில் அவருக்கு பின் வைப்பதற்கான காரணம் நியூட்டன் கொள்கைகள் நவீன அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடித்தளமாய் அமைந்தன என்பதால்தான். இன்றும் குன்னூரில் கம்பீரமாய் காட்சியளிக்கும் வெறி நாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டியர் பற்றி படிக்கும் போது தன்னுளுடைய 50 வயதுக்கு பிறகு மனிதர்களையும் கால்நடைகளையும் பீடித்து பெருமளவில் உயிர் குடித்து வந்த கரணை என்னும் கொடிய நோய் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் காரணமான நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி மெய்ப்பித்து காட்டினார். அவரின் மற்றொரு கண்டுபிடிப்பு உலகம் அறிந்த வெறிநாய்க்கடிக்கு நோய் மருந்து கண்டுபிடித்தது.

இதற்கு முன்பு இயங்கும் பொருள்களின் வேகம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்து அதனை மற்றொரு விஷயமாக மீண்டும் முடுக்கி இயக்காவிடில் இயக்கம் என்று நின்று விடும் என்று மக்கள் நம்பி வந்த காலத்தில்.. அந்த நம்பிக்கை தவறானது. உராய்வு போன்ற வேகத்தை குறைக்கும் திசைகளை அடியோடு நீக்கிவிட முடியுமாயின் இயங்கும் ஒரு பொருள் இடைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் என அவர் கூறினார். இந்த முக்கியமான விதியை நியூட்டன் மீண்டும் தெளிவாக வலியுறுத்தினார் அத்துடன் தமது இயக்கு விதிகள் முதலாவது விதி ஆகும் அமைத்துக் கொண்டார் இதனை மேலும் வடிவமைத்தவர் கலீலியோ கலிலி.

அரிஸ்டாட்டில் பற்றி படிக்கும் போது அவருடைய சில பிற்போக்கு தனமான கருத்துக்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதில் அடிமை முறையை அவர் ஆதரித்ததும், பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் பொதுக் கல்வி முறை எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோபர் நிக்கஸ் தமது நூலில் பூமி தனது அச்சில் சுழல்கிறது சந்திரன் பூமியை சுற்றி வருகிறது என்று துல்லியமாக குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்களும் முக்கியமானவர் அதற்கான எதிர்ப்பை சிக்கலை எப்படி சமாளித்தார் என்பதையும் கூறுகிறது இந்த கட்டுரை.

மாட்டின் லூதர் பற்றி நமக்குத் தெரிந்த வரலாற்றை சொல்லி முடித்தவுடன் அவர் ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார். விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தது அவருடைய முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இதன் மூலம் எழுத படிக்கத் தெரிந்த எவரும் இந்த வேத நூலை தானே படித்தறிந்து கொள்ள உதவியது. இவருடைய மொழியை மிகவும் இயல்பாக இருந்ததால் சாமானிய மக்களுக்கு எளிதில் பொருந்தது என்று கூறுகிறது.

அறிவியல் சார்ந்த சம்மதர்மத்தை வகுத்தவர்களின் முக்கியமானவர் காரல் மார்க்ஸ் அவர் பத்திரிக்கை தொழிலில் சிறிது பணம் ஈட்டியிருந்த போதிலும் பெருமளவில் தன்னுடைய ஆராய்ச்சிக்காக செலவழித்தார். மார்க்ஸ் மறைந்து 100 ஆண்டுகள் ஆன பின்பும் அவருடைய கொள்கையை பின்பற்றுவோர் 100 கோடிக்கும் மேலாக உள்ளனர் என்பது அவருடைய தாக்கத்தின் அர்த்தமாக கருதப்படுகிறது. 

கொலம்பஸ் எடிசன் போன்ற தோன்றவில்லை என்றால் பிற அறிஞர்கள் தோன்றி அதனை செய்திருக்க கூடும் ஆனால் செங்கிஸ்கான் தோன்றாது போயிருந்தால் 13ம் நூற்றாண்டு நிகழ்ந்த மங்கோலிய படையெடுப்புகளும் வெற்றிகளும் நிகழ்ந்திருக்கும் என சொல்ல முடியாது. ஏனெனில் அவை அதுவரையில் ஒற்றுமைப்படாமல் இருந்தனர். செங்கிஸ்கான் அவர்களை ஒற்றுமைப்படுத்தினார். செங்கிஸ்கான் பிறகு அவர்கள் ஒற்றுமையாக வாழ வில்லை. எனவே தான் மனித குல வரலாற்றில் உண்மையில் முதன்மையாக இயக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் ஒருவராக செங்கிஸ்கான் தோற்றமளிக்கிறார்.

நெப்போலியன் லத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கம் ஸ்பெயின் மீது படையெடுத்ததினால் பல ஆண்டுகளாக ஸ்பெயின் வலிமையின்றி இருந்தது. உண்மையாகவே லத்தின் அமெரிக்க விடுதலை இயக்கங்கள் தொடங்கின. எனவே அமெரிக்காவுக்கு லூயிஸினாவை கொடுத்ததில் நெப்போலியனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அறிய முடிகிறது. மார்க் மணி கிரகாம்பளுக்கு முன்னோடியாக விளங்கிய எடிசன் அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி விவரிக்கிறது ஒரு கட்டுரை.

தெரிந்த ஆளுமைகளைப் பற்றி தெரியாத விஷயங்கள் தெரிந்த கண்டுபிடிப்புகளில் மறைந்துள்ள உண்மைகள் வரலாற்று ரீதியில் எவ்வாறு எல்லாம் ஆளுமைகள் இருந்துள்ளனர், அவர்களுடைய கோட்பாடுகள், குறிக்கோள் என்ன என்பது குறித்து தெளிவாக அதே நேரத்தில் மிக எளிமையாகவும் இரண்டு பக்க அளவில் ஒவ்வொருவரை பற்றியும் அறியாத விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டுகோலாக அமைந்தன. இந்த புத்தகம் உலகை மாற்றிய 100 ஆளுமைகள் என்றும் கூட இந்த புத்தகத்தின் தலைப்பு வைக்கலாம் என்று தோன்றியது. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தையும் ,ஆர்வத்தையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தியது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment