Sunday, 20 April 2025

புத்தகம்-45


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-45
பக்கங்கள் -353
நாள்-27

தெரிந்த ரகசியங்கள்
-மஹோத்ரயா ரா

கவனிக்காமல் விடப்பட்ட நேற்றைய சவால்கள்தான்... இன்றைய நாளின் பிரச்சனை!!

மஹாத்ரியா ராவின் *Most and More* எனும் தெரிந்த ரகசியங்கள் புத்தகம் ஒரு அற்புதமான வாழ்வியல் சுய முன்னேற்ற நூல். இது வழக்கமான "செய்ய வேண்டியவை" பட்டியலை விட ஒரு கதை மூலம் பாடங்களை வழங்குகிறது. தன்னை உயர்த்திக் கொள்வதன் மூலம், இப்பூவுலகை உயர்த்த முயலும் என்பதை சொல்லி துவங்குகிறது.

முதலில் நாம் யார் நம்மை எவ்வாறு உணர்வது எனும் பொருளில் துவங்குகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாரதி எனும் கதாபாத்திரத்தின் வழியே வாழ்வியல் உண்மைகளை புரியவைக்கிறார்."வாழ்க்கையில் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன: 'ஒன்று, உங்கள் விருப்பு வெறுப்புகளை உங்கள் வாழ்வின் நோக்கத்திற்கு அடிமையாக்கிவிடுவது அல்லது, உங்கள் வாழ்வின் நோக்கத்தை உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அடிமையாக்கிவிடுவது' என்பது போல்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் பணியிடத்திலும் மேன்மைத்துவம் என்பது தொட்டுவிடும் தூரத்தில் தான் என்பதை சதுரங்கத்தில்வரும் சிப்பாய் பகடை காய் ஒரு நாள் ராணியாக மாறும் வல்லமை உடையதை  மேற்கோளாய் சொல்கிறார்.

எளிய மொழி சிக்கலான கருத்துகளை எளிய கதைகள் மூலம் விளக்குகிறார். எண்ணங்களே சிறந்த செயல்களுக்கான விதைகளாக அமைகின்றன. பள்ளி பருவம் கடந்து நீண்டநாள் கழித்து சந்திக்கும் போது..சராசரி மாணவர் பலர் வாழ்வில் உயர்ந்த இடத்தை அசைந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு ஆச்சர்யம் தாளாது. யார் வாய்ப்பை பயன்படுத்துகிறாரோ அவர்களே வெற்றி அடைகின்றனர்."என்னால் செய்ய முடியும்" என்று நான் நம்பும்போது, அதன்மீது நான் தீவிர நம்பிக்கை கொள்ளும்போது, 'அதை எப்படிச் செய்ய வேண்டும்' என்பது தானாக வெளிப்படுகிறது. ஏதோ ஒன்றை நம்மால் செய்ய முடியும் என்று நம்புவது, அதைச் செய்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் செயலில் நம் மனத்தை முடுக்கிவிடுகிறது என்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனிப்பட்ட பாடத்தைக் கொண்டுள்ளது, இது வாசகரை சிந்திக்கத் தூண்டுகிறது.நிகழ்வதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அனுபவம்," என்ற ஆல்டோஸ் ஹக்ஸ்லி. இந்த அனுபவம் தான் நம்மையும் மற்றவர்களையும் வேறுபடுத்தும் கருவி.இதனை நல்விதமாய் அணுகுபவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.. இல்லாதவர்கள் வெறுமனே என்க்கு மட்டும் ஏன் இப்படி என எண்ணி க்டக்கிறார்கள்.நிகழ்வுகள் கடவுளின் பொறுப்பு..அனுபவம் என்பது மனிதனின் பொறுப்புதான்.

"எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும்போது எவரொருவராலும் நேர்மறையாகச் சிந்திக்க முடியும். ஆனால், விஷயங்கள் சரியாகப் போய்க் கொண்டிருக்காதபோதுதான் நாம் சரியான . நமது சிந்தனையைச் செம்மையாக்குவது என்பது நமது வாழ்க்கையைச் செம்மையாக்குவதற்கான உறுதியான வழி. விஷயங்கள் தவறாகப் போய்க் கொண்டிருக்கும்போது சரியாகச் சிந்திப்பது அதைவிட முக்கியம்," என்று கூறிகிறார்.

நேரந்தவறாமையும் ஆழமான நம்பிக்கையும் மிகவும் முக்கியம்.ஒவ்வொரு முறை நீங்கள் வாக்குத் தவறும்போதும் அடுத்தவருடைய ஆழ்மனத்தில் நீங்கள் ஒரு சந்தேகத்தை உருவாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாக்குறுதி தகர்க்கப்படும்போதும் அந்த ஆழ்மன சந்தேகம் உருவாக்கப்படுகிறது. மனித மனத்தின் பெரும் பகுதி ஆழ்மனமாகவும், ஒரு சிறு பகுதி வெளிமனமாகவும் இருப்பதால், விழிப்புணர்வு நிலையில் எல்லாமே சரியாக இருப்பதாகத் தோன்றினாலும், ஆழ்மனத்தில் சந்தேகம் இருப்பவர்களின் உறவுகள் ஒருபோதும் ஆழமான உறவுகளாக உருவாகாது.ஆகவே ஆழமான நம்பிக்கை உருவாக நாநயம் அவசியம்.

மனிதர்கள் மட்டுமே இறப்பைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும்" போன்ற வரிகள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன 

நூறு ரூபாயின் மதிப்பு நூறு ரூபாய்தான். ஆனால் ஒருமணிநேரத்தின் மதிப்பு ஒருவன் அந்த ஒருமணிநேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தது..எனகூறி நேரத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறார். நேரத்தை முதலீடு செய்யாமல் நீங்கள் எந்த உறவையும் தக்க வைக்க முடியாது. மேலும் " ஒருவருடைய சிந்தனையைப் பற்றிச் சிந்திப்பதுதான் 'கற்றுக் கொண்டுள்ளவற்றை மறக்கக் கற்றுக் கொள்வ'தற்கு அடித்தளமாக அமைகிறது.நம்மை பற்றி மட்டும் சிந்திக்காமல் பிறரின் சிந்தனையை நம் வாழ்க்கைக்கும் பயன்படுத்துவது மேம்படுத்துவது பற்றி எடுத்துரைக்கிறார்.

*நீங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் வளர்வதுதான் மாபெரும் பெருமிதம். உங்கள் கண்களுக்கு முன்னால் வீழ்வதுதான் மிக மோசமான பின்னடைவு

*இக்கணங்கள் நீ கொண்டாடுவதற்கானவை

*"வெற்றி ஒருபோதும் உன் அகங்காரத்திற்குத் தீனி போடக்கூடாது. மாறாக, அது எப்போதும் உன் பொறுப்புணர்விற்குத் தீனிபோட வேண்டும்.

*"நிபுணத்துவம் காலப்போக்கில் வரும், ஆனால் நீ எந்தவொரு வேலையிலும் போதுமான நேரம் நீடிப்பதில்லை. துல்லியம் காலப்போக்கில் வரும், ஆனால் எந்தவொரு செயல்முறையையும் நீ போதுமான காலம் கடைபிடிக்க விரும்புவதில்லை. கச்சிதம் காலப்போக்கில் வரும், ஆனால் மேலோட்டமான சிறப்பில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

தொழில், குடும்பம், ஆரோக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுதல். மற்றவர்களுக்கு உதவுவது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.  சூழ்நிலைகளுக்கு எப்படி நேர்மறையாக நோக்குவது என்பதை விளக்குகிறார்.தினசரி வாழ்க்கை சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளையும்,ஆழ்ந்த தத்துவங்களை எளிதாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. 

வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. இது வெறும் கோட்பாடுகளை விட, நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய பாடங்களை வழங்குகிறது."இது ஒரு விளக்கு போன்றது, இருட்டான நாட்களில் ஒளியைத் தரும்"

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment