கல்வி என்பது நாம் இன்னும் அறியாமல் வைத்துள்ள பலவற்றைப் பற்றியும் நாம் அனுபவிக்காத பல உணர்வுகளைப் பற்றியும் நாம் இதுவரை செய்யாத பல செயல்களைப் பற்றியும் விழிப்புணர்வு பெற்று அறிந்து கொள்வதாகும்ஒவ்வொரு விசயத்திலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றியும் எதையும் எடுத்த எடுப்பில் நம்பாமல் அது குறித்த கேள்விகளை எழுப்பி சந்தேகம் தெளிந்து ஆழ்ந்த ஞானத்தை வளர்த்துக் கொள்ள உதவுவது கல்வியாகும்கல்வியைஏட்டறிவுபட்டறிவு கேட்டறிவு சொல்லறிவு செயலறிவு என்று பல வகைகளில் ஒருவர் பெறக்கூடும். நம் ஒவ்வொரு நாளையும் புதிதாக உணர்வதற்கு நாம் பெறும் கல்வியும் முக்கியமான காரணம்.. நம்மை இவ்வாழ்க்கையில் சலிப்படைவதை விட்டும் தடுத்து புத்துணர்வூட்டும் சக்தி "கல்விக்கு" உண்டு. வாழ்க்கை சலிப்புத் தட்டுகிறதா? புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளத் துவங்கினால் போதும். சலிப்பு பறந்தோடிவிடும். வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியானதாக வேண்டுமா?நாம் கற்ற விசயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் போதும். விருட்சத்தைத் தேடிப் பறந்து வரும் பட்சிகள் போல மகிழ்ச்சி மனதில் பெருக்கெடுக்கும். சிலர் கல்வி நிலையங்கள் சென்று கற்கும் ஏட்டறிவு தேவையில்லை என்று கூறலாம். அதனால் பயனில்லை என்றும் கூறலாம்.அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது பிறந்த சூழல் பொருத்தது அவரவர் வாழ்வில் அனுபவிக்கும் சலுகைகளைப் பொருத்ததுஇதை ப்ரிவிலேஜ் என்போம். ஆனால் இவற்றையெல்லாம் அனுபவிக்காதஆனால் இவற்றை அடையத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பத்தகுந்த வழியாகவும் உந்து சக்தியாகவும் இருப்பது "ஏட்டறிவு"இந்த ஏட்டறிவின் மூலம் கிடைக்கும் பொருளாதரத் தன்னிறைவு மற்றும் சுதந்திரம் என்பது நாம் கனவு காணும் அனைத்துக்கும் முக்கியமானது. எனினும் ஏட்டறிவு பெற்றுவிட்டதாலேயே ஒருவர் முழுமையான கல்வியைப் பெற்று விட்டார் என்று கூறுவதற்கில்லை. இங்கு இப்புவியில் பிறந்து வாழும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் தனக்கே தனக்கென பிரத்யேகமான வாழ்க்கையை வாழ்கிறோம்ஒவ்வொருவரும் அதன் வழி அனுபவம் பெறுகிறோம். ஒரு புத்தகம் படித்துப் பெறுவது அறிவு மட்டுமே ஒரு மனிதனின் அனுபவமானது அறிவுடன் சேர்த்து ஞானத்தையும் வழங்கவல்லது. அறிவு என்பது எதையெல்லாம் செய்து பார்க்கலாம் என்று கூறும்ஞானம் என்பது எதையெல்லாம் செய்யலாம் - எதைச் செய்யக் கூடாதுஎன்பதையும் சேர்த்தே கூறும். இதனால் தான் நூல்கள் மட்டும் பத்தாது. ஆசிரியர்களின் பங்கும் அத்தியாவசியமாகிறது. கல்வியின் முக்கியமான நோக்கம் கற்ற கல்வி மூலம் பெற்ற விசயங்களையும் ஞானத்தையும் தன்னைப் போல கற்க விரும்பும் பலருக்கும் கடத்துவதும் அவர்களும் வாழ்வில் முன்னேற கை கொடுப்பதும் ஆகும். கல்வி என்பது சிந்திக்கத் தூண்டி காணும் அனைத்திலும் மனிதத்தன்மை மாறாமல்வன்முறையை விலக்கி அன்பின் பாதையைத் தேர்த்தெடுக்கச் செய்ய வேண்டும். கல்வி என்பது காணும் மனிதர்களிடத்தில் பேதம் காணும் வழக்கத்தை விட்டொழிப்பதாகவும்அனைவரும் சமமென்ற இயற்கை உணர்வைத் தூண்டும் விதமாக அமைய வேண்டும்.கல்வி என்பது பல மூடநம்பிக்கையை விட்டும் நம்மை விலக்குமாறும்நற்செயல்கள் பக்கம் நம்மைத் திருப்புமாறு அமைய வேண்டும். கற்றது கைமண்ணளவுகல்லாதது இன்னும் உலகளவு என்ற எண்ணம் எப்போதும் மனதில் இருக்க வேண்டும் காணும் யாரிடத்திலும் அவர் சிறியவர் பெரியவர் பேதமின்றி கற்க முடியும் என்ற எண்ணமே கற்போரின் குணமாக இருக்க வேண்டும் கற்ற கல்வியின் பயனாக செருக்கை வளர்க்காமல் சக மனிதர்கள் மீது சகிப்புத்தன்மை வளர்க்க துணை புரிய வேண்டும். கற்றதைத் தானும் பின்பற்றிபிறருக்கும் எத்தி வைப்பது கல்வியின் இலக்கணமாகும். கல்வி என்பது நம்மை சிந்திக்கத் தூண்ட வேண்டும். பெற்ற கல்வியை அதைப் பெறாதவரை நிந்திக்கப் பயன்படுத்துதலாகாது. நம்மையும் நம் சமூகத்தையும் ஏற்றத்திற்கு கொண்டு செல்லும் ஏணியாகவும்கரை சேர்க்க உதவும் தோணியாகவும் இருப்பது நாம் கற்கும் "கல்வி".வாழ்வின் போக்கையும் வாட்டத்தையும் மாற்றும் சக்தி படைத்த ஆயுதம் "கல்வி"அதை எப்பாடுபட்டாவது அனைவரும் அடைய வேண்டும் நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
No comments:
Post a Comment