Friday, 23 May 2025

அமலன் ஸ்டான்லி


புத்தத்தின் முதல் ஐந்து கட்டளைகளில் இரண்டாவது களவாடுதலுக்கு எதிரானது. அது பிறரது தீய குணங்களைத் களவாடி, அவற்றைப் பற்றியே எப்போதும் சிந்திப்பதைக் குறிக்கிறது. ஒருவர் பிறரின் தீய குணங்களைப் பற்றிச் சிந்திக்க அவர்களின் அனுமதியை ஒருபோதும்  கேட்பதில்லை. கேட்காமல் எடுப்பது களவுக்கு ஒப்பானது.

ஒரு வகையில் அது களவேதான். என்ன நடக்கிறது என்றால், உங்கள் மனத்தை எல்லா வகையான குப்பைகளையும் போட்டு நிரப்பிவிடுகிறீர்கள். பிறரது பழக்கவழக்கங்களையோ நடத்தையையோ களவாட நினைத்தால் அவர்களின் நன்னடத்தைகளைக் களவாடுங்கள்.

பிறரது செயல்களில் எவை நலமானதாக, முன்மாதிரியாக அமைகின்றன என்பதைப் பாருங்கள். அவற்றையே உங்களுக்கான பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறரின் தவறுகளையோ தீய பழக்கங்களையோ மட்டுமே கணக்கிடப் போகிறீர்கள் என்றால், உங்களின் மனப்பாங்கைப் பற்றி மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.

பிறரது தீய பழக்கங்களைக் காண்கிறீர்கள். வெளியிலிருந்து பார்க்கையில் அவை தீயன என்றுணர்கிறீர்கள். உங்களுக்கும் அதே பழக்கங்கள் இருந்தால் அது போன்றே தீயதாகத்தானே இருக்கும்?  எனவே பிறரது தீய பழக்கங்களை ஒரு கண்ணாடியாகப் பயன்படுத்துங்கள். உங்களிடம் அவற்றில் ஏதேனும் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

ஆனால் உங்களிடம் அப்பழக்கங்கள் இல்லையென்றால், அவற்றைப் பிறரிடமிருந்து களவாடத் தேவையில்லை. நீங்கள் வீணே உங்கள் மனத்தைக் குப்பைகளால் நிரப்பிக் கொண்டிருப்பதை நிறுத்திவிடலாம்! 

~ தனிசாரோ பிக்கு 
"மனவளத்திற்கான ஐந்து கட்டளைகள்" உரையிலிருந்து

No comments:

Post a Comment