#Reading_Marathon2025
#25RM055
Book No:112/150+
Pages:-190
#ஒருஎழுத்தாளர்_12மாதங்கள்_12புத்தகங்கள்
ஆலவாயன்
-பெருமாள்.முருகன்
மாதொரு பாகனின் தொடர்ச்சியாக இந்நாவல் அமைந்துள்ளது.கிராமத்தில்.குழந்தை பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியாக காளியும் பொன்னாவும் இருக்கின்றனர்.
கதையின் ஆரம்பத்தில் காளி அந்தப் பூவரச மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்ற முடிவைத் தேர்ந்து..எதனால் அவன் இறந்தான் என அதன் வழியில் பயணிக்கிறது.
காளி இறந்தபின் அவன் மனைவி பொன்னா விற்கு சுற்றி இருக்கும் நபர்களின் பேச்சு மற்றும் காளியின் நினைவுடன் நாவல் துவங்கி செல்கிறது.பொன்னாவின் தாயாரும் மாமியார் மாராயியும் பொன்னாவை கவனித்துக் கொள்கின்றனர். குழந்தை இல்லாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான் என ஊரில் பேசுகின்றனர்."கஷ்டம் வரும்போதுதான் யார் யார் நமக்கு இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. கஷ்டம் ஆதரவைக் காட்டித் தருகிறது. வருடும் கைகளின் இதத்தை உணர்த்துகிறது. சொற்களின் மதிப்பைப் புரிய வைக்கிறது. இடைவெளிகளைக் குறைக்கிறது. வருசக்கணக்காய்ப் பேசாமல் இருந்தவள் பவளாயி. இப்போது அம்மாவிடம்கூடக் கிடைக்காத ஆறுதலை அவளிடம் பெற்றாள் பொன்னா.
ஒரு இறப்பு போகப் போக கதையாகிவிடுகிறது.
கரட்டூர்த் தேர்திருவிழா துவங்குகிறது. 14 நாட்கள் நடைபெறும்.குழந்தை பேறு இல்லாதவர்கள் அத்திருவிழாவில் கலந்து கொள்வர்.இரண்டு ஆண்டுக்கு பின் பொன்னாவும் செல்கிறாள். காளிக்கு இது தெரியாது. அவன் சொன்னதாக சொல்லி அனுப்பிவிடுகின்றனர். பொன்னாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை.மாமியாரின் வலியுறுத்தலும் வேண்டுதலும் சொல்லப்பட்டிருக்கிறது.
மிக விரும்பிய மனைவி தன்னை ஏமாற்றியதைத் தாள இயலாமல் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியே காளி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.அன்று இரவு இதை அறிந்துதான் காளி தூக்கிலிட்டு தொங்கினான்.
அதிகாலையில் வீட்டுக்கு வரும் மாராயிதான் தன் பிள்ளையை முதலில் பார்த்து பதறுகிறாள்.
இதை அறிந்து அழுதுகொண்டு பொன்னா ஓடிவருகிறாள்.கதை நான் லீனியர் முறையில் இன்றும் அன்றும் என சொல்லப்படுகிறது. கணவனை இழந்து வாடும் பொன்னா சந்திக்கும் நிகழ்வுகள், கிராமத்து மக்களின் நம்பிக்கைகள், அன்றாட செயல்கள் ஆகியவை சொல்லப்படுகிறது.
கணவனின் நினைவாக காட்டில் கத்தரி செடி நடுகிறாள்.கணவன் இழந்தபின் அழுதுகொண்டு இருக்காமல் காட்டு வேலைக்கு செல்கிறாள்.மாமியார் மாராயிக்கு இது ஒரு ஊக்கம் தருகிறது.
பெருமாள் முருகன் கிராமத்தின் வேளாண் முறைகள் மற்றும் விவசாய வேலை பற்றிய நுண்ணிய குறிப்புகளை கொடுத்திருப்பார். அதன் பின் பொன்னா கருவுற்றிருப்பது தெரிகிறது. இந்த சேதி அறிந்தவுடன் மாமியார்.. காளியே தனக்கு வந்து பிறப்பதாக ஊருக்குள் சொல்கிறாள். தவறாய் பேசுவோரை திட்டுகிறாள்.
இடையிடையே குடும்ப உறவுகள் பற்றிய செய்திகளும், பொன்னாவுக்கு ஆதரவாய் இருக்கும் மாராயி,வெங்காயி,நல்லாயின் துணையும் நாவலில் விளக்கப்பட்டிருக்கிறது.பாட்டிகளின் உரையாடலில் கிராமத்து வாழ்வியல் நமக்கும் தருகிறது.
நாவால் முழுவதும் பெண்ணின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் உளவியல் பற்றியும் கூறியுள்ளார். மாதொருபாகனின் அடுத்தடுத்த க்ளைமேக்ஸ் நிகழ்வாக இக்கதை அமைந்திருக்கிறது. நாவலுக்கு வலுசேர்க்கும் விதத்தில் வேலாயின் கிளைக்கதையும் உதவுகிறது.
கிராமத்து மொழிகள் அனைத்தும் பழமொழியும், விடுகதையும்,மூத்தோர் சொல் தத்திவமும் சொல்வது புதுமையாகவும் அழகியலுடனும் இருக்கிறது. உதாரணத்திற்கு
"எல்லாக் கஷ்டங்களையும் பேச்சில் கரைத்துக் கொள்வார்கள்"
"ஆட்டுக்கு வால அளந்து வெச்சிருக்கறான். எருமைக்கு ஏன் நீளமா வெச்சிருக்கிறான்? மல்லையும் சாணியையும் கொழப்பித் தம்மேல தானே அடிச்சிக்கத்தான்' " என சொல்வது நன்று.
ஒவ்வொரு பாகம் முடியும் போது பூவரச மரத்தை குறிப்பிடுவார். அது காளி குறித்த எண்ணத்தையும் நமக்கு சொல்கிறது.
நாவலின் தலைப்புதான் கதைக்கரு. அந்த கதையின் முடிவு கடைசி பத்துப் பக்கம் விரிகிறது.
சர்சைக்குரிய கருத்து இருந்தாலும் நாவலின் எந்த இடத்திலும் முகச்சுழிப்போ, விரசமோ இல்லாமல் இயல்பான கிராமத்து நடையில் உள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment