Saturday, 23 July 2016

விக்ரமாதித்யன்


அவன் எப்போது தாத்தாவானான்

தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்

பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்

வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்

ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்

கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்

குடித்துக்
கொண்டிருந்தான்

பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்

ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்

ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்

என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்

எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்

இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்

இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்

No comments:

Post a Comment