Tuesday, 19 July 2016

short cut


கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)

1) பிருந்தாவனம்
2) விளக்கு மட்டுமா சிவப்பு
3) நடந்த கதை
4)ரத்த புஷ்பங்கள்
5) சிவப்புக்கல் மூக்குத்தி
6) சிங்காரி பார்த்த சென்னை
7) சிவகங்கை சீமை (நாடகம்)
8) மிசா, மாங்கனி
9) முப்பது நாளும் பவுர்ணமி
10) ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
11) வனவாசம்

SHORTCUT: "பி.வி.நரசிம்ம ராவ்" (இந்தியாவின் முன்னால் பிரதமர்)

இவருடைய பெயரின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணதாசன் அவர்களின் புதினங்களை குறிப்பதாகும்.

பி - பிருந்தாவனம்
வி - விளக்கு மட்டுமா சிவப்பு
ந - நடந்த கதை
ர - ரத்த புஷ்பங்கள்
சி - சிவப்புக்கல் மூக்குத்தி,சிங்காரி பார்த்த சென்னை
ம் - மிசா, மாங்கனி
ம - முப்பது நாளும் பவுர்ணமி
ரா - ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
வ் - வனவாசம்

*******************************************

பாரதி தாசன் படைப்புகள்:(with SHORTCUT IDEA)
1.இருண்ட வீடு
2.அமைதி
3.குடும்ப விளக்கு
4.மணிமேகலை
5.தேனருவி
6. சாரல்
7.இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9.எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிராந்தையார்
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15.காதலா? கடமையா?
16. கடமை
17. இணையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு

மேற்கண்ட அணைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது:

SHORTSTORY:
"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது பாண்டியன் என்ற மன்னன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.
அவர் காதலா? கடமையா? என்று கேட்க கடமை என்று கூறினான் அந்த இளைஞன். உடனே நீதான் இணையற்ற வீரன் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.

*******************************************

"ஒரு பாடல் வரியினை" கொடுத்து யார் எழுதியது என்று கேட்கும் கேள்வி

இதனை எழுதில் நினைவில் வைத்துகொள்ள சிறந்த ஐடியா.

உதாரணமாக பாரதியார் எழுதிய முக்கிய பாடல்கள் மற்றும் அதனை எழுதில் நினைவில் வைத்து கொள்ள SHORTCUT ஐடியா.

பாரதியார் முக்கிய பாடல்கள்:

1) "மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும்"

2) "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்"

3) தனி ஒருவனுக்குனவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்"

4) "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்"

5) "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே"

6) "ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்"

7) எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள்"

8) பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்

9) புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

10) நமக்கு தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்

11) காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்

12) பக்தி செய்வீர் செகத்தீரே பயனுண்டு பக்தியாலே"

13) செப்புமொழி பதினெட்டுடயால் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

14) செந்தமிழ் நாடெனும் போதினிலே

15) தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

16) தேமறுத தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்

மேற்கண்ட அணைத்து பாடல்களையும் எழுதில் நினைவில் வைக்க கீழ்க்கண்ட வரிகளில் உள்ள வார்த்தைகளை மட்டும் படித்தல் போதுமானது.

ஒவ்வொரு வார்த்தையும் மேற்கண்ட பாடல்களை வரிசையாக குறிக்கிறது.

SHORTCUT :

"மனதில் உறுதியுடனும் வாக்கில் ஒளியுடனும் தனி ஒருவனாக பிறநாடுக்கு சென்று, ஆண் பெண், ஏழை பணக்காரன் வேறுபாடில்லாமல், எல்லோரும் ஓர் குலமாக பள்ளிக்கூடம் அமைத்து ஏழைக்கு எழுத்தறிவித்து தொழில் செய்து காதல் பக்தி போன்ற சிந்தனைகளோடு செந்தமிழ் நாட்டின் தருமத்தினை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்"

*******************************************

பாரதியார் இயற்றிய நூல்கள்(WITH SHORTCUT IDEA)
1) பாப்பா பாட்டு
2) பாஞ்சாலி சபதம்
3) புதிய ஆத்திசூடி
4) சந்திரிகையின் கதை
5) சொர்ண குமாரி
6) கண்ணன் பாட்டு
7) குயில் பாட்டு
8) விநாயகர் நான் மணிமாலை
9) வேதாந்த பாடல்கள்
10) ஞான ரதம்

SHORTCUT : "பாச கவிஞன்"

மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பாரதியார் இயற்றிய முக்கிய நூல்களை குறிப்பிடுகின்றன .
பா - பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி
ச - சந்திரிகையின் கதை, சொர்ண குமாரி
க - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
வி - விநாயகர் நான் மணிமாலை, வேதாந்த பாடல்கள்
ஞன் - ஞான ரதம்

*******************************************

பம்மல் கே.சம்பந்தனார் இயற்றிய நாடக நூல்கள் (shortcut idea)

1) அமலாதித்யன்
2) வாணிபுரத்து வணிகன்
3)விரும்

1 comment: