*புத்தர் காலத்திலேயே*
துரோகம் தூங்குவதில்லை.
சரித்திரம் என்பதே துரோகத் தொகுப்புதான்.
துரோகங்கள் மகான்கள் பிறந்த இனங்களையும் துரத்துகின்றன. மகத்தான மனிதர்களையும் களங்கப்படுத்துகின்றன. நாம் இழைக்கும் செயல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் காலக்குண்டு என்பதே அறிந்தவர்கள் அறிய வேண்டிய செய்தி.
*நம்பிக்கை நல்ல காலைச் சிற்றுண்டி; மோசமான இரவு உணவு*
*வெ.இறையன்பு---
#*இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான்.*
"என்ன யோசனை"
"இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை யுகங்களாய்
அப்படி என்னதான் பேசும்
என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக் கடல்
தூரத்து வானத்துக்குத் தூரிகையில்லாமல்
எப்படி வர்ணமடிக்கிறது
என்று யோசிக்கிறேன்."
"வா! கொஞ்சநேரம்
கடலோடு கால்நனைப்போம்."
"நான் வரமாட்டேன்"
"எதனால்?"
"ஆக்டோபஸ் அலைகள் என்னை
அள்ளிக் கொண்டோடிவிட்டால்?"
"அப்படியாவது கடல்நீர்
குடிநீராகட்டுமே."
-வைரமுத்து.
No comments:
Post a Comment