Friday, 24 September 2021

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் விமர்சனம்*மணி

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் விமர்சனம்
*மணி

ஆட்டுக்கார அலமேலு, கும்கி, அழகர்சாமியின் குதிரை போல 
விலங்கினை(மாடுகள்) மையமாய் வைத்து பின்னப்பட்ட  கிராமத்துக் கதை.சூர்யா தயாரிப்பு, யூ ட்யூப் புகழ் கோடாங்கி வடிவேலு எல்லாம் நடிச்சிருக்காங்க.. ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.நிறைவேறுச்சானு கடைசியில் பார்ப்போம்

#கதை

காவல் நிலையத்தில் வெள்ளையன் கருப்பனை கானோம்னு கம்ப்ளைண்ட் கொடுக்க வர்றார் ஹீரோ மிதுன் மாணிக்கம்.யாருனு கம்ளைண்ட் எழுத விசாரிக்கும் போது
அது மாடுகள்னு சொன்ன போது விரட்டி விடுகிறார்.

உயிருக்குயிராய் வீட்டில் இருந்த 
மாடுகளை தேட செல்லும் போது மீடியா செய்தியாளர் வாணிபோஜன் உதவியுடன் மாடுகளை கண்டுபிடித்தார்களா?அதன் மூலம் கிராமத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதே கதை

#ப்ளஸ்

*அறிமுக நடிகர் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், அப்பத்தா, வடிவேல் முருகன், வாணி போஜன் என  முக்கிய கதாபாத்திரங்கள் நன்றாய் நடித்துள்ளனர்

*சுகுமாரின் ஒளிப்பதிவு பொட்டல் காட்டையும் கண் முன் அழகாய் காட்டுகிறது

*போகிற போக்கில் பாஜகவினரையும், சீமானையும் சீண்டிட்டு போயிருக்காங்க

*வடிவேல் முருகனின் டைமிங் வசனம் நன்று. இன்னும் கொஞ்சம் ஸ்கோப் குடுத்திருக்கலாம்

*கரண்ட்டே இல்லாமல் இலவச பொருள் கொடுப்பது

*இன்ஜுனியரிங் படித்த புரோட்டா மாஸ்டர் தேவை, இந்தியில் ஊர்ப் பெயர் இருக்கும் இணையத்தில் வந்த பளிச் டெம்ப்ளேட்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்

#மைனஸ்

*காணாமல் போன மாடுகளால் படும் வேதனையை அனுதாபமாய் பார்க்க வைக்கிறாங்களே தவிர அழுத்தமாய் சொல்லியிருந்தால் ஆடியன்சும் பதறியிருப்பாங்க

*ரம்யா பாண்டியன் வீட்டிலிருந்து வந்த சீதனமாய் வந்த மாடுகள் மீது அவ்வளவு ஈர்ப்பு உடனே ஹீரோவுக்கு வருமா.அதற்கு எதாச்சும் அழுத்தமான காட்சிகள் இல்லை

*முதல் பாதியில் இருந்த க்ரிப் இரண்டாம் பாதியில் இல்லாததால் ஒரு சோர்வு வந்துவிடுகிறது.

*மாடு கதையா , அடிப்படை வசதி இல்லாத கிராமம் னு இன்னொரு ட்ராக் போவதால் எது மையக்கதைனு தெரியல

*லைனா மீடியா முழுக்க நுழையும் காட்சிகள்.

மாடுகளை பிள்ளை போல் வளர்க்கும் கிராமங்களை அறிவோம்.அவை உழவுக்கு,பால் கறக்க,வண்டி இழுக்க,குடும்பத்தின் ஜீவாதாரமாய் அந்த மாடுகள் இருக்கும்.அப்போது அந்த மாடுகள் பறிபோகும் போது நமக்கே பரிதாப உணர்ச்சி வரும். அடடா இனி அந்த குடும்பம்  பொருளாதார தேவைக்கு என்ன செய்வார்கள் என்று.இது இப்படத்தில் மிஸ்ஸிங்.கரண்ட்டே இல்லாத கிராமம் இருக்கானு யோசிக்க வைக்கிறாங்க. கிராமத்து மனிதர்களையும் அவர்களின் எளிய வாழ்வியலையும் பேசியதற்காக பாராட்டலாம்.

சூப்பரும் இல்லை சுமாரும் இல்லை. மீடியம்.
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
அழுத்தம் இல்லாததால் எந்த அனுதாபமும் இல்லை

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment