Tuesday, 9 August 2022

Old is gold-3*மணி



தமிழ்நாட்டின் கதை
-அருணகிரி

மனிதன் அரசியல்தான் இயங்குகிறான்
-அரிஸ்டாட்டில்

தமிழகம் குறித்து பல்வேறு நூல்கள் வெளிவந்தாலும் அனைத்து நூல்களும் படிக்க வேண்டும். ஏனெனில் வரலாற்றை எழுதும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை.. அறியாத பல விஷயங்களை சொல்லக்கூடும். அதேபோலத்தான் இந்த நூல் 2013 ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை படிக்கும்போது பிரம்மிப்பாக இருந்தது. அப்போது போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்ததால் இதிலுள்ள சில தகவல்கள் மிகவும் உபயோகமாக இருந்தது. இதன் ஆசிரியர் ஏற்கனவே பல்வேறு நாடுகளைப் பற்றிய கதைகளும், கட்சிகள் உருவான கதைகளும் எழுதியுள்ளார். அப்போது விகடன் பிரசுரத்தில் வந்த ஒவ்வொரு புத்தகமும் முதலில் வாங்கி விடுவது உண்டு அந்த வகையில் இந்த புத்தகமும்.

தமிழ்நாட்டின் கதை என்னும் நூலில் ஏழு கட்டுரைகளில் தமிழகம் குறித்த விரிவான பார்வையை அறிந்து கொள்ள முடிகிறது.தமிழக அரசியல் களம் என்னும் கட்டுரையில் உலக வரலாற்றோடு இந்திய வரலாறு எவ்வாறெல்லாம் வந்தது என்றும் சுதந்திரத்திற்கு முன் இந்திய அரசின் முக்கிய சட்டங்கள் அனைத்தையும் கூறி தமிழ்நாட்டின் வரலாற்றினை 1967 இல் இருந்து எழுதியுள்ளார்.

சட்டமன்றம் கூடிய இடங்களாக விவரித்துள்ளவை.. 1921 முதல் 37 வரை ஜார்ஜ் கோட்டையிலும்,1937 முதல் 38 வரை சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக சென்ட் அரங்கிலும்,1938 முதல் 39 வரை ராஜாஜி அரங்கிலும்,1946 முதல் 52 வரை புனித ஜார்ஜ் கோட்டையிலும் 1952 முதல் 56 வரை கலைவாணர் அரங்கத்தின் முன் உள்ள பாலர் அரங்கிலும் நடைபெற்றது. அந்த அரங்கைதான் இடித்து கலைவாணர் அரங்கம் புதிதாக கட்டப்பட்டது.1959 ஏப்ரல் 20 முதல் 30 வரை கோடைகால கூட்டத்தொடர் உதகமண்டலத்தில் உள்ள அரண்மூர் மாளிகையில் நடைபெற்றது. இந்த தகவல்கள் எல்லாம் படிக்கும்போது மிகவும் வியப்பாகவும் புதிய தகவலாகவும் தெரிந்தது.

சென்னை மாகாணத்தில் நிகழ்ந்த அரசியல் மறுமலர்ச்சியும், துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் சபைகளும் தொழிலாளர் போராட்டங்களும் ,திராவிட சங்க விடுதி, நீதி கட்சியின் தோற்றம், நீதிக்கட்சியின் தலைவர்கள் அவர்களின் சாதனைகள் குறித்தும் விவரமாக விவரித்துள்ளார். பெரியாரின் அரசியல் துவக்கமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்
தமிழகத்தில் அமைந்த சட்டமன்ற வரலாறும் அமைச்சரவைகளையும் குறித்து விரிவாக விளக்கி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் குறித்தும் ஒவ்வொரு கட்சியின் வரலாறும் இதில் பதிவு செய்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி தெரிவித்தது புதிய தகவலாக இருந்தது. 1948 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் நலன்களை பாதுகாப்பது என் நோக்கில் சென்னை ராஜாஜி அரங்கில் கட்சியை துவங்கப்பட்டு ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது கேரள மாநிலத்தில் மட்டுமே ஏணி சின்னம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் போன்றவர்களால் அருமையான வாதங்களை எடுத்து வைத்திருப்பார்கள்.

 1962,67 ,71 ஆகிய தேர்தலில் கேரள மாநில மஞ்சேரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மில்லத். ஒவ்வொரு முறையும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மட்டுமே அந்த தொகுதிக்கு  சென்றவர்.. பிரச்சாரத்துக்கு செல்லாமல் மக்களிடையே செல்வாக்குடன் வெற்றி பெற்றவர். 1957 இல் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியபோது "கையிலே காசு இல்லாதவர் ,மனதிலே மாசு அற்றவர்" காயிதே மில்லத் என்று அண்ணாவால் போற்றப்பட்டதை படிக்கும் போது நன்றாக இருந்தது

தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற அனைத்து பொது தேர்தல்களையும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் பற்றியும் இதில் தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றையும் இதில் பேசியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதேபோல் 1973 ஆம் ஆண்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ராஜாங்கம் இயற்கை எய்தியதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் முதன்முதலாக அதிமுக வேட்பாளராக மாய தேவர் வெற்றி பெற்றார். அதில் காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் திமுக மூன்றாம் இடத்தையும் இந்திரா காங்கிரஸ் நான்காம் இடத்தையும் பெற்றது.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடம் இல்லை. அப்போது நாள் ஒன்றுக்கு விவசாயக் கூலி ஆறு ஆனா. ஆகவே முதலாவது தேர்தலிலேயே வாக்களிக்க வர மறுத்தவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து நான்கு அனா கொடுத்து மக்களை ஓட்டளிக்க வைத்தனர். அன்னைக்கே ஓட்டு போட காசு தந்திருக்காங்க என நினைக்கும் போது என் ரெம்ப பெருமையா இருக்கு

*1952 பொதுத்தேர்வு முடிவில் சென்னை மாகாணத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் அல்லாத 164 உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து டி பிரகாசம் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினர். இந்தியாவில் முதன்முதலாக தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி இதுவாகும்

*1967 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 234 ஆகவே நீடிக்கிறது

*சென்னை மாகாண சட்ட சபையை 1921 ஆம் ஆண்டு கர்னாட் கோமகன் தொடங்கி வைத்தார். வெலிங்டன் பிரபு 1922 ஆம் ஆண்டு வருகை புரிந்து தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த பேரவை தலைவர் இருக்கையை பரிசாக அளித்தார்.

*1952 ஆம் ஆண்டு குடியாத்தத்திலும்
(இதில் காமராஜர் வெற்றி பெற்றார்) 1963 ஆம் ஆண்டு திருவண்ணாமலையிலும்
(இதில் காங்கிரஸ் எதிர்ப்பு அலையால் திமுக வெற்றி பெற்றது) முக்கிய இடைத்தேர்தலாக அரசியல் வரலாற்றில் பார்க்கப்படுகிறது

*1957, 62 ,84 ,89 ,91, 96 தேர்தல்களில் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் இருந்து ஏ எஸ் பொன்னம்மாள் ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தில் இருந்த முதல்வர்கள் ஆளுநர்கள் திரை பிரபலங்கள் தேவை பிரபலங்களின் கட்சிகள் என்று அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தில் நிகழ்ந்த அத்தனையும் ஆவணமாக செய்துள்ளார் தமிழக அரசியலில் பெண்களின் முக்கியத்துவத்தையும் என் அரசியலாளர்களின் பின்னணியும் இதில் சேர்த்துள்ளார் . கடந்த கால தமிழக அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ள புத்தகம் உதவுகிறது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment