Sunday, 20 November 2022

ஜானகிராமன்


உப்பாக இருப்போம்.

உணவுப் பொருட்களில் உப்பு தனித்துவமானது. ஒரு உணவில் உப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அந்த உணவு சுவைக்கும், ஆனால் யாரும் அந்த உணவின் சுவைக்காக உப்பை பாராட்டுவதில்லை. உணவில் உப்பு சேர்க்கப்பட வில்லை என்றால் உணவு தின்பதற்கே தகுதியற்றதாகி விடுகிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. உப்பின் அளவு குறைவாகவோ, அல்லது உப்பில்லாமலோ சமைக்கப்படும் போது தான் உப்பின் தேவை உடனடியாக உணரப்படுகிறது. 

அதே போல பணிச்சூழலிலும் நட்பு வட்டத்திலும் நமது இருப்பும் பங்களிப்பும் உப்பைப் போல பிறர் அறியாமலும் நாம் இல்லாதிருந்தால் நமது தேவை மிக முக்கியமாக வெளிப்படுவது போலவும் கரைந்திருக்க வேண்டும்.

உப்பு மிகுதியாக சேர்க்கப்பட்டாலும் உணவில் சுவை கெட்டுப்போவது போல, நமது பங்களிப்பு தேவைக்கும் அதிகமாக இருக்கும் போது அந்தச் செயலில் போலித்தனமும் நமது ஈகோவும் வெளிப்படுகிறது. அதையும் தவிர்ப்போம்.

இந்த பூமியின் உப்பாக இருப்பவர்களே, இந்த உலகத்தின் ஒளியாக இருக்கிறார்கள். 

இனிய நற்காலை 🌸

No comments:

Post a Comment